எத்தனை
இதில் 25 இடங்களுக்குள் பிடிக்கும் நபர்கள் அடுத்த சுற்றுக்கு தகுதி பெறுவார்கள். இதில் இந்தியா சார்பாக பவ்யாத் மீர்சா கலந்து கொண்டு ஆடி வருகிறார். நேற்று டிரெஸ்ஸேஜ் பிரிவில் அவர் மிகவும் சிறப்பாக ஆடினார்.
டிரெஸ்ஸேஜ்
டிரெஸ்ஸேஜ் என்பது குதிரை ஓட்டம் திறனை சோதிப்பது ஆகும். குதிரையை ஒரு வீரர் எப்படி கையாள்கிறார், அதன் மூவ்கள் எப்படி இருக்கிறது என்பதை சோதிக்கும் போட்டியாகும். இதில் இந்திய வீரர் மிர்ஸா 10வது இடம் பிடித்தார்.
தடை தாண்டுதல்
ஆனால் இன்று கிராஸ் கண்ட்ரி போட்டிகள் நடைபெற்றது. இது தடை தாண்டும் குதிரை ஓட்டம் ஆகும். இதில் இன்று இந்திய வீரர் மிஸ்ரா 39.20 புள்ளிகள் மட்டுமே பெற்றார். இதனால் நேற்று 10வது இடத்தில் இருந்தவர் இன்று 13வது இடத்திற்கு பின்னடைவை சந்தித்தார்.
நாளை
இதனால் நாளை நடக்கும் ஜம்பிங் சுற்றில் இவர் சிறப்பாக ஆட வேண்டும். இதுவும் குதிரைகளின் தாவும் திறனை சோதிக்கும் ஒரு வகை ஆட்டம் ஆகும். 25 இடங்களுக்குள் இவர் எப்படியாவது முடிக்க வேண்டும். அப்போது மட்டுமே ஒலிம்பிக் இறுதி சுற்றுக்கு இவர் தகுதி பெற முடியும்.