நயோமி
இந்த ஒலிம்பிக் தொடரை நயோமி ஒசாக்கா வெற்றியோடுதான் தொடங்கினார். முதலில் சீனாவின் செங் சென்சாய்க்கு எதிராக 6-1, 6-4 என்ற செட் கணக்கில் வெற்றிபெற்று நம்பிக்கை அளித்தார். அதன்பின் சுவிட்சர்லாந்து விக்டோரிஜாவிற்கு எதிராக 6-3, 6-2 என்ற புள்ளிகள் கணக்கில் வெற்றிபெற்றார்.
தோல்வி
இதனால் பெண்கள் ஒற்றையர் பிரிவு ஆட்டத்தில் நயோமி நன்றாக ஆடுவார், ஜப்பானுக்கு மெடல் வாங்கித்தருவார் என்றே எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் இன்று மூன்றாவது சுற்று ஆட்டத்தில் மகளிர் ஒற்றையர் பிரிவில் செக் குடியரசின் மார்கெட்டாவிடம் ஒசாக்கா தோல்வி அடைந்து அதிர்ச்சி அளித்தார்.
நேர் செட்
6-1, 6-4 என்ற நேர் செட்களில் தோல்வி அடைந்து நயோமி வெளியேறினார். இன்று அவரின் ஆட்டத்தில் தொடக்கத்தில் இருந்தே சொதப்பலாக அமைந்தது. பொதுவாக சர்வ்கள் செய்வதில் கவனம் ஈர்க்கும் நாயோமி இன்று எனோ மோசமாக திணறினார்.
இரண்டு மாதம்
இந்த ஒலிம்பிக் போட்டிக்காக நயோமி இரண்டு மாதம் ஓய்வில் இருந்தார். மனம் அமைதியாக இருக்க வேண்டும் என்று ஓய்வில் இருந்தார். ஓய்விற்கு பின் வந்து இரண்டு போட்டிகளை வென்றாலும் கூட இன்று ஒலிம்பிக்கில் தோல்வி அடைந்து வெளியேறி உள்ளார்.