தோல்வி
இந்த நிலையில் தற்போது ஒலிம்பிக் ஆண்கள் இரட்டையர் பேட்மிண்டன் போட்டியில் இந்திய ஜோடி தோல்வி அடைந்தது. இன்று இந்தோனேசியாவின் மார்கஸ் பெர்னால்டி, கெவின் சஞ்சயாவிற்கும், இந்தியாவின் சத்விக் சாய்ராஜ் ராங்கிரெட்டி - சிராக் ஷெட்டிக்கும் இடையில் போட்டி நடைபெற்றது.
திணறல்
இதில் தொடக்கத்தில் இருந்தே இந்தோனேசிய ஜோடி ஆதிக்கம் செலுத்தியது. அதிலும் முதல் செட்டில் பாதியில் சிராக் ஷெட்டிக்கு காலில் லேசான காயம் ஏற்பட்டது. இதனால் இந்திய ஜோடி சரிவர ஆட முடியாமல் திணறியது.
முதல் செட்
முதல் செட்டை இந்தோனேசிய ஜோடி 21 - 13 என்ற கணக்கில் கைப்பற்றியது. அதன்பின் இரண்டாவது செட்டில் இந்திய இணையின் ஆட்டம் இன்னும் மோசமாக இருந்தது. இதனால் இரண்டாவது செட்டையும் இந்தோனேசிய ஜோடி 21 - 12 என்ற கணக்கில் கைப்பற்றியது.
தோல்வி
இதனால் இந்தோனேசியாவிடம் இந்தியாவின் சத்விக் சாய்ராஜ் ராங்கிரெட்டி - சிராக் ஷெட்டி ஜோடி இந்தோனேசியாவின் மார்கஸ் பெர்னால்டி, கெவின் சஞ்சயா ஜோடியிடம் தோல்வி அடைந்தது. அடுத்தடுத்த டேபிள் டென்னிஸ் பிரிவில் தொடர்ந்து இந்தியா சறுக்கி வருவது அதிர்ச்சி அளித்து வருகிறது.