ஒலிம்பிக்
இந்த ஒலிம்பிக் தொடரில் இந்திய டேபிள் டென்னிஸ் குழுவுடன் சவுமியாதீப் ராய் டோக்கியோ சென்று இருந்தார். வீரர், வீராங்கனைகள் பர்சனல் கோச் தவிர்த்து மொத்தமாக எல்லோருக்கும் பயிற்சி கொடுப்பதற்காக சவுமியாதீப் ராய் தேர்வு செய்யப்பட்டார். இவர் 2006 காமன்வெல்த் போட்டியில் தங்கம் வென்றவர். டென்னிஸ் கமிட்டியில் பயிற்சியாளராக இருக்கிறார்.
விதி
இந்திய விதிப்படி சவுமியாதீப் ராய் மட்டுமே டேபிள் டென்னிஸ் வீரர்களுக்கு போட்டி நடக்கும் களத்தில் ஆலோசனை வழங்க முடியும். வீரர், வீராங்கனைகளின் தனிப்பட்ட பயிற்சியாளர்கள் போட்டி நடக்கும் அரங்கிற்குள் அனுமதிக்கப்பட மாட்டார்கள், வெளியே பயிற்சி தரலாம். இந்த நிலையில் டேபிள் டென்னிஸ் வீராங்கனை மணிகா பத்ரா தனது தனிப்பட்ட பயிற்சியாளர் சன்மாயை பரன்ஜாபாயை போட்டி நடக்கும் களத்திற்குள் அனுமதிக்க வேண்டும் என்று கேட்டு இருக்கிறார்.
பயிற்சி
அவரிடம்தான் நான் பயிற்சி பெற்றேன். இதுவே எனக்கு உதவியாக இருக்கும் என்று மணிகா பத்ரா அனுமதி கேட்டு இருக்கிறார். ஆனால் மணிகா பத்ராவின் தனி பயிற்சியாளரை இந்திய ஒலிம்பிக் கமிட்டி போட்டி நடக்கும் களத்திற்குள் அனுமதிக்கவில்லை. வெளியே பயிற்சி கொடுக்க மட்டுமே அனுமதித்தது. தேசிய பயிற்சியாளர் சவுமியாதீப் ராயிடம் ஆலோசனை பெறுமாறு மணிகாவிற்கு உத்தரவிடப்பட்டது.
விமர்சனம்
ஆனால் மணிகா களத்தில் தேசிய பயிற்சியாளர் சவுமியாதீப் ராயிடம் எந்த ஆலோசனையும் பெறவில்லை. வெளியே தனிப்பட்ட பயிற்சியாளர் சன்மாயிடம் பெற்ற ஆலோசனைகளை வைத்தே மணிகா போட்டியில் ஆடி இருக்கிறார். இதுதான் தற்போது சர்ச்சையாகி உள்ளது. இவரின் செயல்பாட்டுக்கு எதிராக ஆக்சன் எடுக்கப்படும் என்று இந்திய டென்னிஸ் கமிட்டி அறிவித்துள்ளது.
ஆக்சன்
மணிகா செய்தது ஏற்றுக்கொள்ள முடியாதது. அவர் செய்தது ஒழுங்கீமான செயல். மற்ற வீரர்கள் எல்லோரும் தேசிய பயிற்சியாளரை அணுகிய போது, மணிகா மட்டும் தனியாக செயல்பட்டது தவறானது. அவர் மீதான புகார் குறித்து விசாரணை நடத்தி விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என்று இந்திய டென்னிஸ் கமிட்டி அறிவித்துள்ளது.