வெற்றி
இந்திய வீரர்கள் அருண் லால் மற்றும் அர்ஜுன் சிங் ஒலிம்பிக் துடுப்பு படகு இரட்டையர் காலிறுதி போட்டியில் மிகவும் சிறப்பாக ஆடினார்கள். இந்த போட்டியில் 6.51.36 நிமிடத்தில் தங்கள் சுற்றுகளை அரவிந்த் மற்றும் அர்ஜுன் நிறைவு செய்தனர். இதன் மூலம் செமி பைனல் துடுப்பு படகு போட்டிக்கு இந்தியா தகுதி பெற்றது.
தோல்வி
இதையடுத்து இன்று நடந்த செமி பைனல் போட்டியில் அருண் லால் மற்றும் அர்ஜுன் சிங் ஜோடி மீது அதிக எதிர்பார்ப்பு இருந்தது. இதில் ஒவ்வொரு குழுவிலும் முதல் 3 இடங்களை பிடிக்கும் அணி பைனலுக்கு செல்லும். ஆனால் இன்று அருண் லால் மற்றும் அர்ஜுன் சிங் ஜோடி 6வது இடத்தை பிடித்து இறுதி சுற்றுக்கு செல்லும் வாய்ப்பை இழந்தது.
வாய்ப்பு
அயர்லாந்து, இத்தாலி, பெல்ஜியம், உக்ரைன், ஸ்பெயின் ஆகிய அணிகள் இருந்த குழுவில் இந்திய அணி இன்று ஆடியது. இதில் 6:24.41 நிமிடங்களில் இலக்கை அடைந்து இந்தியா 6வது இடத்தை மட்டுமே பிடித்தது. அயர்லாந்து 6:05.33, இத்தாலி 6:07.70, பெல்ஜியம் 6:13.07 நிமிடங்களில் இலக்கை அடைந்து இறுதி சுற்றுக்கு தகுதி பெற்றது.
இறுதி போட்டி
பாய்மர படகு போட்டியில் ஜூலை 30ம் தேதி இறுதிப்போட்டிகள் அனைத்து பிரிவிலும் நடக்க உள்ளது. பதக்கம் வெல்லும் இந்த போட்டிக்கு இந்திய வீரர்கள் அருண் லால் மற்றும் அர்ஜுன் சிங் தகுதி பெறவில்லை.