For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

ஒலிம்பிக் பெண்கள் 200m ஓட்டம்.. இந்தியாவின் டூட்டி சந்த் நூலிழையில் தோல்வி.. மொத்தமாக வெளியேற்றம்!

டோக்கியோ: ஒலிம்பிக் பெண்கள் 200m ஓட்ட பந்தயத்தில் இந்தியாவின் டூட்டி சந்த் தோல்வி அடைந்து வெளியேறி உள்ளார்.

ஒலிம்பிக் 2020 தொடரில் இன்று பெண்கள் 200m ஓட்டம் தகுதி சுற்று 1 நடைபெற்றது. முன்னதாக 100மீ ஓட்டத்தில் இந்திய வீராங்கனை டூட்டி சந்த் தோல்வி அடைந்தார். தகுதி சுற்று போட்டியிலேயே இவர் தோல்வி அடைந்து இறுதி சுற்றுக்கு தகுதி பெறாமல் ஏமாற்றம் அளித்தார்.

Olympics 2020 Athletics: Dutee Chand loses in 200m heats for women

இந்த நிலையில் இன்று 200 மீ ஓட்டத்தில் இந்தியா சார்பாக அவர் கலந்து கொண்டார். இன்று நடக்கும் போட்டிகள் பல்வேறு குழுக்களாக பிரித்து நடத்தப்பட்டது. இதில் டூட்டி சந்த் நான்காவது குழுவில் தகுதி சுற்றில் கலந்து கொண்டார்.

இதில் முதல் 3 இடங்களை பிடிக்கும் வீராங்கனைகள் ஒவ்வொரு குழுவிலும் அடுத்த சுற்றுக்கு தகுதி பெறுவார்கள். இன்று ஓட்டப்பந்தயத்தில் நன்றாக தொடக்கம் கொடுத்த டூட்டி சந்த் போக போக வேகம் குறைந்தார். முதலில் இரண்டாம் இடம் இருந்தவர் 100மீ முடிவில் 4ம் இடத்திற்கு பின் தாங்கினார்.

ஒலிம்பிக் 2020.. ஆண்கள் பாக்சிங் காலிறுதி ஆட்டத்தில் இந்திய வீரர் சதிஷ் குமார் தோல்வி.. வெளியேற்றம் ஒலிம்பிக் 2020.. ஆண்கள் பாக்சிங் காலிறுதி ஆட்டத்தில் இந்திய வீரர் சதிஷ் குமார் தோல்வி.. வெளியேற்றம்

அதன்பின் கடைசி வரை முன்னேற முடியாமல் திணறியவர் 200மீ ஓட்டத்தை 4ம் இடத்தில் முடித்தார். இதனால் ஒலிம்பிக் பெண்கள் 200m ஓட்டத்தில் இறுதி சுற்றுக்கு தகுதி பெறாமல் இந்தியாவின் டூட்டி சந்த் தோல்வி அடைந்து வெளியேறினார்.

தகுதி சுற்றில் நான்காவது இடம் பிடித்து டூட்டி சந்த் வெளியேறினார்.

Story first published: Monday, August 2, 2021, 10:56 [IST]
Other articles published on Aug 2, 2021
English summary
Olympics 2020 Athletics: Dutee Chand loses in 200m heats for women after her failed 100m race.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X