சதிஷ்
உஸ்பெகிஸ்தானின் பகோதிர் ஜலோலவிடம் சதிஷ் மோதினார். இன்று வெற்றிபெற்றால் கண்டிப்பாக சதிஷ் ஒரு பதக்கம் வெல்வார் என்ற நிலை இருந்தது. ஆனால் போட்டியின் தொடக்கத்தில் இருந்தே உஸ்பெகிஸ்தானின் பகோதிர் ஜலோலவ் ஆதிக்கம் செலுத்தினார்.
முதல் ரவுண்ட்
முதல் ரவுண்டில் மிக எளிதாக அனைத்து 10 புள்ளிகளையும் பகோதிர் ஜலோலவ் வென்றார். முதல் சுற்று முழுக்க சதிஷ் பெரிய பிளான் எதுவும் இல்லாமல் ஆடியது போல இருந்தது. இரண்டாவது சுற்றிலும் பகோதிர் ஜலோலவின் ஆதிக்கம் தொடர்ந்தது.
ஆதிக்கம்
இரண்டாவது சுற்றிலும் அனைத்து நடுவர்களிடம் இருந்தும் அனைத்து புள்ளிகளையும் பகோதிர் கைப்பற்றினார். இதிலும் மொத்தமாக 50 புள்ளிகளை அவர் பெற்றார். இந்த சுற்றிலும் சதிஷ் எந்த புள்ளியும் பெறவில்லை.
கடைசி ரவுண்ட்
பின்னர் கடைசி சுற்றிலும் சதிஷ் எந்த புள்ளியும் பெறவில்லை. இதனால் மொத்தமாக 5-0 என்ற கணக்கில் சதிஷ் குமார் படுதோல்வி அடைந்தார். அதோடு அரையிறுதிக்கு செல்லும் வாய்ப்பை இழந்து வெளியேறினார்.