ஆதிக்கம்
ஆட்டத்தின் தொடக்கத்திலேயே ஜெர்மனி இந்தியாவிற்கு எதிராக ஆதிக்கம் செலுத்தியது. ஜெர்மனி தொடக்கத்திலேயே முதல் கோல் போட்டு முன்னிலை வகித்தது. ஆட்டத்தின் 2வது நிமிடத்திலேயே ஜெர்மனி முதல் கோல் போட்டது. 4வது நிமிடத்தில் இந்தியாவிற்கு பெனால்டி கார்னர் வாய்ப்பு கிடைத்தது. ஆனால் இந்தியாவின் ருபிண்டர் கோல் அடிக்கும் வாய்ப்பை தவறவிட்டார். ஜெர்மனிக்கு 6வது நிமிடத்தில் மீண்டும் கோல் அடிக்கும் வாய்ப்பு கிடைத்தது.
கீப்பர்
ஆனால் கீப்பர் ஸ்ரீஜீஷ் பந்தை தடுத்தார், இன்று இந்தியாவின் டிபன்ஸ் மோசமாக அமைந்துள்ளது. இந்தியா அஃபன்ஸிவ் ஆட்டம் ஆட நினைத்ததால் இன்று டிபன்ஸ் மோசமாக இருந்தது. முதல் 10 நிமிடங்கள் முழுக்க ஜெர்மனி களத்தில் ஆதிக்கம் செலுத்தியது.
பெனால்டி
ஆட்டத்தின் 15வது நிமிடத்தில் ஜெர்மனிக்கு மீண்டும் பெனால்டி கார்னர் வாய்ப்பு கிடைத்தது. ஆட்டத்தின் 15வது நிமிடத்தில் ஜெர்மனிக்கு மீண்டும் மூன்றாவது பெனால்டி கார்னர் கிடைத்து. அதை தொடர்ந்து நான்காவதாக இன்னொரு பெனால்டி கார்னர் வாய்ப்பும் கிடைத்தது. வரிசையாக பெனால்டி கார்னர் மூலம் ஜெர்மனி ஆதிக்கம் செலுத்தி வருகிறது.
கீப்பர் ஸ்ரீஜீஷ்
நான்கு முறையும் இந்தியாவின் கீப்பர் ஸ்ரீஜீஷ் பந்தை தடுத்து அணியை காப்பாற்றினார். முதல் கால் ஆட்டத்தில் இந்தியாவிற்கு எதிராக ஜெர்மனி 1:0 என்ற கணக்கில் முன்னிலை வகித்தது. அதன்பின் ஆட்டத்தின் 16வது நிமிடத்தில் இந்தியா முதல் கோல் போட்டது. இந்தியாவின் சிம்ரான் ஜித் முதல் கோல் போட்டு அசத்தினார். இதன்பின் ஆட்டத்தில் விறுவிறுப்பு கூடியது.
மீண்டும் வெற்றி
ஆனால் இந்தியாவிற்கு எதிரான ஆட்டத்தில் ஜெர்மனி மீண்டும் லீட் எடுத்தது. 22வது நிமிடத்தில் மீண்டும் ஜெர்மனி இரண்டாவது கோல் போட்டு முன்னிலை பெற்றது. பின்னர் மீண்டும் 24வது நிமிடத்தில் ஜெர்மனி 3வது கோல் போட்டு அதிக முன்னிலை பெற்றது. 26வது நிமிடத்தில் இந்தியாவிற்கு பெனால்டி கார்னர் வாய்ப்பு கிடைத்தது. இதை பயன்படுத்தி இந்தியா 2வது கோல் போட்டது. இந்தியாவின் ஹர்திக் சிங் கோல் போட்டு அசத்தினார்.
விறுவிறுப்பு
அதன்பின் ஆட்டம் மிகவும் விறுவிறுப்பாக சென்றது. சரியாக 30வது நிமிடத்தில் இந்தியாவின் ஹர்மன்பிரீத் சிங் கோல் போட்டு அசத்தினார். இதனால் முதல் பாதி ஆட்ட நேர முடிவில் இந்தியா 3: ஜெர்மனி 3 என்று ஆட்டம் சமன் ஆனது.ஆட்டத்தின் 31வது நிமிடத்தில் இந்தியாவிற்கு பெனால்டி கார்னர் வாய்ப்பு கிடைத்தது. நீண்ட நேரத்திற்கு பின் இந்தியாவிற்கு பெனால்டி கார்னர் வாய்ப்பு கிடைத்தது.
பெனால்டி கார்னர்
பெனால்டி கார்னர் வாய்ப்பை பயன்படுத்தி இந்தியா 4வது கோல் போட்டது. ருபிண்டர் சிங் 31வது நிமிடத்தில் இந்தியாவிற்காக கோல் போட்டார். ஜெர்மனிக்கு எதிராக இந்தியா 4:3 என்ற கோல் கணக்கில் முன்னிலை பெற்றது. 34வது நிமிடத்தில் இந்தியா மீண்டும் கோல் போட்டு அசத்தியது. இரண்டாம் பாதி ஆட்டத்தில் இந்திய வீரர்கள் அபாரமான முறையில் ஆடினார்கள். 34வது நிமிடத்தில் இந்தியாவின் ஐந்தாவது கோலை சிம்ரான் ஜித் பதிவு செய்தார்.
வாய்ப்பு மேல் வாய்ப்பு
37வது நிமிடத்தில் இந்தியாவிற்கு மீண்டும் கோல் அடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. ஆனால் நூலிழையில் கோல் வாய்ப்பை இந்தியாவின் மன்பிரீத் சிங் மிஸ் செய்தார். 42வது நிமிடத்தில் இந்தியாவிற்கு மேலும் ஒரு பெனால்டி கார்னர் வாய்ப்பு கிடைத்தது. ஆனால் இந்தியாவின் ஸ்மித் கோல் அடிக்கும் வாய்ப்பை தவறவிட்டார்.
44வது நிமிடத்தில் அடுத்தடுத்து ஜெர்மனிக்கு 2 பெனால்டி கார்னர் வாய்ப்பு கிடைத்தது. ஆனால் அடுத்தடுத்த பெனால்டி கார்னர்களில் ஜெர்மனியால் கோல் அடிக்க முடியவில்லை.
விறுவிறுப்பு
கடைசி கால் ஆட்டத்திலும் இந்தியா ஆதிக்கம் செலுத்தியது. ஆட்டத்தின் கடைசி 15 நிமிடங்கள் விறுவிறுப்பாக சென்றது. அதன்பின் 47வது நிமிடத்தில் பெனால்டி கார்னர் மூலம் ஜெர்மனி 4வது கோல் அடித்தது. இதனால் ஆட்டத்தில் பரபரப்பு தொற்றிக்கொண்டது. 53வது நிமிடத்தில் ஜெர்மனிக்கு மீண்டும் பெனால்டி கார்னர் வாய்ப்பு கிடைத்தது.இதையும் சேவ் செய்து இந்திய அணியை காப்பாற்றினார் கீப்பர் ஸ்ரீஜேஷ்.
57வது நிமிடம்
போட்டி முடியும் நேரத்தில் 57வது நிமிடத்தில் ஜெர்மனிக்கு பெனால்டி கார்னர் கிடைத்தது. ஆனால் கோல் அடிக்கும் வாய்ப்பை ஜெர்மனி நழுவவிட்டது. கடைசி 6 நொடி இருக்கும் போது ஜெர்மனிக்கு பெனால்டி கார்னர் கிடைத்தது. ஆனால் அதை ஸ்ரீஜேஷ் தடுக்க மிகவும் திரில்லான ஆட்டத்தில் இந்திய அணி வென்று வெண்கல பதக்கத்தை தட்டி சென்றது.