வெற்றி
இவர் கொலம்பியாவின் டைக்ரசை இன்று அவர் எதிர்கொண்டார். ஆட்டத்தின் தொடக்கத்தில் இருந்தே ரவிக்குமார் தஹியா ஆதிக்கம் செலுத்தினார்.இதில் கொலம்பியாவின் டைக்ரசை எளிதாக 13:2 என்ற புள்ளி கணக்கில் வீழ்த்தி, 1/8 பைனல் ஆட்டத்தில் இந்திய வீரர் ரவிக்குமார் தஹியா வெற்றி பெற்றுள்ளார்.
காலிறுதி
இதனால் ரவிக்குமார் தஹியா தற்போது காலிறுதிக்கு தகுதி பெற்றுள்ளார். இந்த நிலையில் இன்று இன்னொரு பக்கம் ஒலிம்பிக் 2020 மல்யுத்தத்தின் ஆண்கள் 86kg பிரிவு- 1/8 பைனல் ஆட்டம் நடைபெற்றது. இதில் இந்தியாவின் தீபக் புனியா நைஜீரியா நாட்டின் அகிமிரோவை எதிர்கொண்டார்.
தீபக் புனியா
இதில் தொடக்கத்தில் இருந்தே தீபக் புனியா ஆதிக்கம் செலுத்தினார். முதல் சுற்றில் தீபக் புனியா அடுத்தடுத்து 2 முறை 2 புள்ளிகளை பெற்றார். முதல் சுற்றிக் நைஜீரியா நாட்டின் அகிமிரோ ஒரே ஒரு புள்ளி மட்டுமே பெற்றார். அதன்பின் இரண்டாவது சுற்றிலும் தீபக் புனியா ஆதிக்கம் செலுத்தினார்.
இரண்டாவது சுற்று
இரண்டாவது சுற்றில் வரிசையாக 1 2 1 2 2 என்று மொத்தமாக எட்டு புள்ளிகளை பெற்றார். இதனால் மொத்தமாக தீபக் புனியா நைஜீரியா நாட்டின் அகிமிரோவை 12:1 என்ற புள்ளி கணக்கில் வீழ்த்தினார். இதன் மூலம் தீபக் புனியா மல்யுத்தத்தின் ஆண்கள் 86kg பிரிவு ஆட்டத்தில் காலிறுதிக்கு தகுதி பெற்றுள்ளார்.