தோல்வி
மங்கோலியாவின் போலார்டுயா குரல்கேவிடம் சோனம் மாலிக் தோல்வி அடைந்து வெளியேற்றினார். கடைசி நொடி வரை இரண்டு பேருமே தலா 2 புள்ளிகளுடன் இருந்தனர். இதனால் ஆட்டம் டிரா ஆனது. ஆனால் போலார்டுயா டேக் டவுன் புள்ளிகளை வைத்து இருந்தார். இதனால் அவர் வெற்றியாளராக அறிவிக்கப்பட்டார்
இன்று
இந்த நிலையில் இன்று ஒலிம்பிக் 2020 மல்யுத்தத்தின் ஆண்கள் 57 kg பிரிவு- 1/8 பைனல் ஆட்டங்கள் நடைபெற்றது. இதில் இந்தியா சார்பாக ரவிக்குமார் தஹியா கலந்து கொண்டார். கொலம்பியாவின் டைக்ரசை இன்று அவர் எதிர்கொண்டார் .ஆட்டத்தின் தொடக்கத்தில் இருந்தே ரவிக்குமார் தஹியா ஆதிக்கம் செலுத்தினார். முதல் சுற்றில் எளிதாக ரவிக்குமார் தஹியா இரண்டு புள்ளிகளை பெற்றார்.
இரண்டாம் சுற்று
அதன்பின் மீண்டும் டேக் டவுன் புள்ளியான ஒரு புள்ளிகளை பெற்றார். இரண்டாம் சுற்றில் ரவிக்குமார் தஹியா ருத்ரதாண்டவம் ஆடினார். கொலம்பியாவின் டைக்ரசுக்கு கொஞ்சம் கூட இடம் கொடுக்காமல் அடுத்தடுத்த புள்ளிகளை பெற்று டஃப் பைட் கொடுத்தார்.முதல் சுற்றில் டைக்ரஸ் 2 புள்ளிகள் மட்டுமே பெற்றார்.
வெற்றி
இரண்டாவது சுற்றில் டைக்ரசால் அந்த புள்ளிகளை கூட எடுக்க முடியவில்லை. ஆனால் இரண்டாம் சுற்றில் ரவிக்குமார் 10 புள்ளிகள் பெற்றார். இதனால் கொலம்பியாவின் டைக்ரசை எளிதாக 13:2 என்ற புள்ளி கணக்கில் வீழ்த்தி, 1/8 பைனல் ஆட்டத்தில் இந்திய வீரர் ரவிக்குமார் தஹியா வெற்றி பெற்றுள்ளார். இதனால் ரவிக்குமார் தஹியா தற்போது காலிறுதிக்கு தகுதி பெற்றுள்ளார்.