கோல்
ஆட்டம் தொடங்கிய 22 நிமிடத்தில் இந்தியா முதல் கோல் போட்டது. இந்தியாவின் வருண் குமார் அசாத்தியமான கோல் அடித்து இந்திய அணியை லீட் எடுக்க வைத்தார். அதன்பின் அர்ஜெண்டினா அணி மீண்டு வர முடியாமல் நீண்ட நேரம் திணறியது.
அர்ஜென்டினா
பின்னர் ஆட்டத்தின் 48வது நிமிடத்தில் அர்ஜென்டினாவின் சேஸல்லா முதல் கோல் அடித்தார். இதன் பின் இரண்டு அணிகளும் கோல் அடிக்க முடியாமல் கடுமையாக திணறியது. இதனால் ஆட்டம் கடைசி 5 நிமிடம் வரை விறுவிறுப்பாக சென்றது.
திணறல்
ஆனால் கடைசி 5 நிமிடம் இருக்கும் போது இந்தியாவின் விவேக் இன்னொரு கோல் அடித்தார். இதனால் இந்தியா 2 கோல்கள் அடித்து முன்னிலைபெற்றது.கடைசி நிமிடத்தில் இந்தியாவிற்கு பெனால்டி கார்னர் வாய்ப்பு கிடைக்க மீண்டும் 3வது கோலை இந்தியா பதிவு செய்தது. அர்ஜென்டினாவை 3-1 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி இந்திய அணி வெற்றி பெற்றுள்ளது.இதன் மூலம் குழு ஆட்டத்தில் இந்தியா ஒரே ஒரு தோல்வியுடன் இரண்டாம் பிடித்துள்ளது.
வெற்றி
இதனால் அடுத்த சுற்றுக்கு இந்தியா செல்வது உறுதியாகி உள்ளது. இந்த ஒலிம்பிக் தொடரை முதலில் வெற்றியோடுதான் தொடங்கியது. நியூசிலாந்துக்கு எதிராக 3-2 என்ற கோல் கணக்கில் இந்தியா வென்றது. இந்திய அணி ஆஸ்திரேலியாவிற்கு எதிராக 7-1 கோல் கணக்கில் மிக மோசமான தோல்வியை இந்தியா தழுவியது. அதன்பின் ஸ்பெயினுக்கு எதிரான ஹாக்கி போட்டியில் இந்தியா 3-0 என்ற கோல் கணக்கில் வென்றது குறிப்பிடத்தக்கது.