வில்வித்தை
இன்று வில்வித்தை பிரிவில் இந்திய ஆண்கள் குழு கலந்து கொண்டது. அட்டானு தாஸ், பிரவின் ஜாதவ், தருண்தீப் ராய் 16 அணிகள் சுற்றில் கலந்து கொண்டு வென்றனர். கஜகஸ்தான் அணியை இந்திய வில்வித்தை ஆண்கள் படை காலையில் நடந்த ஆட்டத்தில் வீழ்த்தியது.
எப்படி
6-2 என்ற புள்ளி கணக்கில் கஜகஸ்தான் அணியை வீழ்த்தி இந்தியா காலிறுதி சுற்றுக்கு தகுதி பெற்றது. காலிறுதியில் தென் கொரியா அணியுடன் இந்தியா மோதியது. தென் கொரியா அணி இந்த ஒலிம்பிக்கில் வில்வித்தையில் மிகவும் வலிமையான அணியாக உள்ளது. காலிறுதி ஆட்டம் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட நிலையில் காலிறுதியில் தென் கொரியாவிடம் இந்திய அணி தோல்வி அடைந்தது.
இந்தியா
இந்த போட்டியில் தென் கொரியாவின் வலுவான கிம் ஜி டியோக், கி வுஜின், ஒ ஜின்ஏக் ஆகியோரை இந்திய அணி எதிர்கொண்டது. 59, 59., 56 மதிப்பெண்களை பெற்று மொத்தமாக மூன்று சுற்று முடிவில் 6 புள்ளிகளை தென் கொரியா அணி பெற்றது. தென் கொரியாவின் மூன்று வீரர்களும் சிறப்பாக இதில் அம்பு எய்தி இருந்தார்கள்.
தோல்வி
ஆனால் இந்திய வீரர்கள் அட்டானு தாஸ், பிரவின் ஜாதவ், தருண்தீப் ராய் மொத்தமாக 54, 57, 54 மதிப்பெண்களை மட்டும் பெற்றனர். இதனால் இந்திய அணி மொத்தமாக மூன்று சுற்று முடிவில் ஒரு புள்ளி கூட பெறவில்லை. இதன் காரணமாக இந்திய அணி தென் கொரியாவிடம் 6-0 என்ற கணக்கில் தோல்வி அடைந்தது.