தோல்வி
இரண்டு தோல்வி அடைந்த நிலையில் மூன்றாவது போட்டியில் வெல்ல வேண்டிய கட்டாயத்தில் இருந்தது. ஆனால் கிரேட் பிரிட்டனுக்கு எதிரான மூன்றாவது ஹாக்கி போட்டியிலும் இந்திய மகளிர் அணி தோல்வி அடைந்தது. கிரேட் பிரிட்டன் அணி 4-1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது.
தொடர் சறுக்கல்
ஒலிம்பிக் 2020 தொடரில் இந்திய மகளிர் ஹாக்கி அணி இன்னும் இரண்டு போட்டிகளில் ஆட உள்ளது. இன்று அயர்லாந்து, அதன்பின் நாளை தென்னாப்பிரிக்காவுடன் ஆட வேண்டும். இந்த இரண்டும் போட்டியிலும் வென்றால் மட்டுமே அடுத்த சுற்றுக்கு செல்வதை பற்றி யோசிக்க முடியும் என்ற நிலை நிலவியது.
எதிர்கொண்டது
இந்த லீக் போட்டியில் 6 அணிகள் கொண்ட குழுவில் 4 இடங்களுக்குள் வரும் அணிகள் அடுத்த சுற்றுக்கு செல்லும். தற்போது இந்தியா 5வது இடத்தில் உள்ளது. இன்று கண்டிப்பாக வென்றாக வேண்டிய கட்டாயத்தில் அயர்லாந்து அணியை இந்திய மகளிர் ஹாக்கி அணி எதிர்கொண்டது. மழை காரணமாக ஆட்டம் 1 மணி நேரம் தாமதமாக தொடங்கியது.
கோல்
முதல் 56 நிமிடங்கள் வரை இந்திய பெண்கள் அணியும், அயர்லாந்து அணியும் ஒரு கோல் கூட அடிக்கவில்லை. கடைசியில் இந்திய வீராங்கனை நவ்நீத் 57வது நிமிடத்தில் கோல் அடித்தார். இதனால் 1-0 கோல் கணக்கில் அயர்லாந்தை வீழ்த்தி இந்தியா வெற்றி பெற்றுள்ளது. நாளை நடக்க உள்ள தென்னாப்பிரிக்காவுடனான ஆட்டத்தில் வெல்ல வேண்டிய கட்டாயத்தில் தற்போது இந்திய பெண்கள் அணி உள்ளது.