யார்
கிரகஸ்தான் வீரர் ஏர்னேசரை பஜ்ரங் புனியா எதிர்கொண்டார். இந்த ஆட்டத்தில் தொடக்கத்தில் இருந்தே இரண்டு தரப்பு வீரர்களும் கடுமையாக ஆதிக்கம் செலுத்தினார்கள். மாறி மாறி புள்ளிகளை பெற்று தொடர்ந்து ஆதிக்கம் செலுத்தி வந்தனர்.
ஆதிக்கம்
முதல் சுற்றில் ஏர்னேசர் ஒரு புள்ளி மட்டுமே பெற்றார். ஆனால் முதல் சுற்றிலேயே 1, 2 என்று மொத்தம் 3 புள்ளிகளை பஜ்ரங் புனியா பெற்றுவிட்டார். இதனால் பஜ்ரங் புனியா எளிதாக வெற்றிபெறுவார் என்றே எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் இரண்டாம் சுற்றில் ஆட்டம் மாறியது.
இரண்டாம் சுற்று
இரண்டாம் சுற்றில் ஏர்னேசர் மேலும் 2 புள்ளிகள் பெற ஆட்டம் சமன் ஆனது. அதன்பின் கடைசி வரை பஜ்ரங் புனியா புள்ளிகளை பெற முடியாமல் திணறினார். ஆனால் ஆட்டம் முடிவதற்கு சில நொடிகளுக்கு முன்பாக பஜ்ரங் புனியா ஏர்னேசரை 5 நொடிகள் தரையில் படுக்க வைத்து லாக் செய்தார்.
லாக்
இப்படி எதிரணி வீரரை சில நொடிகள் தரையில் படுக்க வைப்பது டேக் டவுன் என்று அழைக்கப்படும். பொதுவாக ஆட்டம் டிரா ஆகும் சமயங்களில் யார் டேக் டவுன் புள்ளிகளை எடுக்கிறார்களோ அதை வைத்தே வெற்றியாளர் தீர்மானிக்கப்படுவார். இந்த நிலையில் இன்று 3 புள்ளிகள் மற்றும் டேக் டவுன் புள்ளிகள் பெற்று பஜ்ரங் புனியா காலிறுதிக்கு தகுதி பெற்றுள்ளார்.