இன்று
இன்று ஆண்கள் இரட்டையர் பாய்மர படகு போட்டி நடைபெற்றது. இது 49இ ஆர் பிரிவாகும். இதில் இரண்டு கைகளில் பாய்மரத்தை இயக்க முடியும். இன்று நடத்த போட்டியில் ஸ்பெயின், நியூசிலாந்து, ஆஸ்திரேலியா உள்ளிட்ட அணிகள் கலந்து கொண்டன.இதில் இந்தியா சார்பாக கேசி கணபதி மற்றும் வருண் தாக்கூர் ஆகியோர் கலந்து கொண்டனர்.
12 ரேஸ்கள்
இந்த போட்டியில் தினமும் 2 ரேஸ்கள் வீதம் மொத்தம் 12 ரேஸ்கள் நடக்கும். நேற்று ஒரே ஒரு ரேஸ்தான் நடந்தது. இதில் கேசி கணபதி மற்றும் வருண் தாக்கூர் ஜோடி 18வது இடம் பிடித்தனர். இந்த நிலையில் இந்திய ஜோடி முன்னேற்றத்துடன் ரேஸை தொடங்கியது. 14 இடங்கள் வரை இந்திய ஜோடி முன்னேறி வந்தது. ஆனால் இரண்டாவது ரேஸ் முடிவில் மீண்டும் 18 இடத்திற்கு இவர்கள் பின் தங்கினார்கள்.
மூன்றாவது ரேஸ்
இதையடுத்து பின் மூன்றாவது ரேஸில் வேகமாக முன்னேறி வந்த கேசி கணபதி மற்றும் வருண் தாக்கூர் ஜோடி ஒரு இடம் மேலே சென்று 17வது இடத்தில் முடித்தனர். இதில் இவர்களுக்கு 16வது இடத்திற்கு செல்லும் வாய்ப்பு இருந்தும் கூட சின்ன தாமதத்தால் கேசி கணபதி மற்றும் வருண் தாக்கூர் மூன்றாவது ரேஸை 17வது இடத்திலேயே முடித்தனர்.
நான்காவது ரேஸ்
பின்னர் நான்காவது ரேஸில் மேலும் பின்னடைவை சந்தித்து கேசி கணபதி மற்றும் வருண் தாக்கூர் ஜோடி அதிர்ச்சி அளித்தனர். கடைசி ரேஸை முடிக்க 3.24 நிமிடம் கூடுதலாக எடுத்துக் கொண்டனர். இறுதியாக கேசி கணபதி மற்றும் வருண் தாக்கூர் நான்காவது ரேஸை 19கேது இடத்தில் முடித்தனர். 12வது ரேஸ் முடியும் போது இவர்கள் 10 இடங்களுக்கு இருந்தால் மட்டுமே பைனல்ஸ் போட்டிக்கு தகுதி பெற முடியும், என்பது குறிப்பிடத்தக்கது.