துவக்க விழா
இன்று நடந்த ஒலிம்பிக் 2020 துவக்க விழாவில் கொரோனாவால் உலகம் முழுக்க பலியானவர்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது. கடந்த இரண்டு வருடங்களில் பலியானவர்கள் குறித்து இந்த விழாவில் நினைவு கூறப்பட்டது. கொரியாமா என்ற ஜப்பான் கலைஞர் மூலம் பெருந்தொற்று குறித்த மிகவும் உருக்கமான நாடகம் காட்சிப்படுத்தப்பட்டது.
நாடகம்
150 வருடங்களில் முதல்முறையாக கடந்த வருடம் ஒலிம்பிக் போட்டிகள் தள்ளி வைக்கப்பட்டது. கொரோனா பரவல் காரணமாக ஒலிம்பிக் போட்டிகள் ஒருவருடம் தாமதமாக நடக்கிறது. அதேபோல் துவக்க விழாவில் தொடக்கத்திலேயே கொரோனா காலத்தில் விளையாட்டு வீரர்கள் எப்படி பயிற்சி எடுத்தனர் என்று விளக்கப்பட்டது.
வீரர்கள்
வீட்டிற்கு உள்ளே இவர்கள் எப்படி பயிற்சி எடுத்தனர். கொரோனா காரணமாக ஒலிம்பிக் வீரர்கள் எவ்வளவு கஷ்டப்பட்டனர் என்ற நாடகமும் அரங்கேற்றப்பட்டது. இந்த மைதானத்திற்கு ஜப்பான் கொடியை ஜப்பான் விளையாட்டு வீரர்கள், பிரபலங்கள், ஒரு சுகாதார பணியாளர் என்று மொத்தம் 6 பேர் கொண்டு வந்தனர். துவக்க விழாவில் ஆரம்பத்தில் UNITED BY EMOTION என்ற ஒலிம்பிக் தீம் பாடம் ஒற்றுமையை குறிக்கும் வகையில் ஒலிபரப்பப்பட்டது.
ஒற்றுமை
உணர்வுகளால் ஒன்றிணைவோம் என்று குறிப்பிடும் வகையில் இந்த பாடல் அமைந்து இருந்தது. அதேபோல் 1972 முனிச் ஒலிம்பிக் போட்டியில் கொல்லப்பட்ட இஸ்ரேல் வீரர்கள் 11 பேர் குறித்தும் இந்த துவக்க விழாவில் நினைவு கூறப்பட்டு அதற்காக அஞ்சலி செலுத்தப்பட்டது.