ஏன் முக்கியம்
இதில் ஆண்கள் ஹாக்கி அணி செமி பைனல் செல்வது என்பது இரண்டு காரணங்களுக்காக முக்கியத்துவம் பெறுகிறது. முதல் விஷயம் 49 வருடங்களுக்கு பின் இப்படி செமி பைனல் போட்டிக்கு இந்திய ஆண்கள் படை தகுதி பெற்றுள்ளது. கடைசியாக 1972 ஒலிம்பிக் செமி பைனலில் இந்தியா ஆடியது. அதன்பின் இப்போதுதான் இந்தியா செமி பைனல் சென்றுள்ளது.
தங்கம்
இடையில் ரஷ்யாவில் 1980ல் ஒலிம்பிக் நடைபெற்றது. இதில் இந்திய ஹாக்கி அணி தங்கம் வென்றது. ஆனால் அப்போது குழு போட்டிகளில் எடுக்கப்பட்ட புள்ளிகளை வைத்தே நேரடியாக தங்கத்திற்கான போட்டி நடந்தது. அதோடு ரஷ்யாவின் ஆப்கானிஸ்தான் ஆக்கிரமிப்பு காரணமாக இந்த தொடரை ஆஸ்திரேலியா, அமெரிக்கா உள்ளிட்ட அணிகள் புறக்கணித்தது.
வெறும் 6 அணிகள்
வெறும் 6 அணிகள் மட்டுமே ஆடிய தொடரில் இந்தியா வென்றது. ஆனால் இந்த வருடம் நடக்கும் ஹாக்கி மிகவும் கடினமானது, போட்டி நிறைந்தது. அதோடு ஆஸ்திரேலியா போன்ற அணிகள் மிக சிறப்பாக பார்மில் இருக்கும் போது இந்தியா இப்படி ஒரு வெற்றியை நிகழ்த்தி இருக்கிறது. 40 வருடங்களுக்கு பின் இந்திய ஆண்கள் அணியின் இந்த ஹாக்கி வெற்றி மிக முக்கியமான ஒன்றாக அமைந்துள்ளது. ஜாம்பவான்கள் கோலோச்சும் காலத்தில் இந்தியா இந்த வெற்றியை பதிவு செய்துள்ளது.
பெண்கள் அணி
இன்னொரு பக்கம் பெண்கள் அணி முதல்முறை காலிறுதி போட்டிக்கு தகுதி பெற்று தற்போது அரையிறுதிக்கும் சென்றுள்ளது. இதற்கு முன் இப்படி ஒரு வெற்றியை இந்திய பெண்கள் அணி பெற்றதே இல்லை. மூன்று போட்டிகளில் வரிசையாக தோல்வி அடைத்துவிட்டு, அதன்பின் அயர்லாந்து, தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இந்திய பெண்கள் அணி காலிறுதி வந்தது.
கோப்பை
அதன்பின் தற்போது ஆஸ்திரேலியாவை வீழ்த்திவிட்டு அரையிறுதிக்கு இந்திய பெண்கள் அணி தகுதி பெற்றுள்ளது. இரண்டு அணிகளும் இப்படி ஒன்றாக செமி பைனல் சென்றது இல்லை. அதிலும் ஆஸ்திரேலியாவை இந்தியா வீழ்த்தும் என்பதால் கனவில் கூட நினைக்க முடியாத ஒன்று.
நம்பிக்கை
முக்கியமாக இவர்கள் மீது பெரிதாக இந்திய ரசிகர்களே நம்பிக்கை வைக்காத நிலையில்தான் இரண்டு அணிகளும் வெற்றியை பதிவு செய்துள்ளன. இதன் காரணமாகவே ஒலிம்பிக் ஹாக்கி வரலாற்றில் இந்தியாவிற்கு இது முக்கியமான வருடமாகவும், இந்த வெற்றி மிக முக்கியமானதாகவும் பார்க்கப்படுகிறது!