டெல்லி: மல்யுத்த வீரர் சுஷில் குமாருக்கு பத்மபூஷண் விருது வழங்க வேண்டும் என்று அவருடைய கோச் பரிந்துரை செய்துள்ளார்.
கேப்டன் கூல் டோணிக்கு பத்மபூஷண் விருது வழங்க வேண்டும் என்று, இந்திய கிரிக்கெட் கட்டுப்பாடு வாரியம் பரிந்துரை செய்துள்ளது. இதனிடையில், பாட்மின்டன் வீராங்கனை பி.வி. சிந்துவுக்கு பத்மபூஷண் விருது வழங்க வேண்டும் என்று விளையாட்டு அமைச்சகம் பரிந்துரை செய்திருந்தது.
இந்த நிலையில், இந்தியாவுக்கு இரண்டு ஒலிம்பிக் பதக்கத்தை வென்று தந்த மல்யுத்த வீரர் சுஷில் குமாருக்கு பத்மபூஷண் விருது வழங்க வேண்டும் என்று, அவருடைய கோச் யஷ்வீர் சிங் பரிந்துரை செய்துள்ளார்.
2008 ஒலிம்பிக்கில் வெண்கலம், 2012 ஒலிம்பிக்கில் வெள்ளி பதக்கத்தை வென்றவர் சுஷில்குமார். தனிநபர் பரிவில் இந்தியாவுக்கு இரண்டு பதக்கங்கள் பெற்ற தந்த ஒரே வீரர் அவர் தான்.
2011ல் பத்மஸ்ரீ விருது வழங்கப்பட்ட அவருக்கு, பத்மபூஷண் விருது வழங்க வேண்டும் என்று கோச் யஷ்வீர் சிங் பரிந்துரை செய்துள்ளார்.