முதல் பதக்கம் பளு தூக்குதல் .. கடைசி பேட்மிண்டன்
இந்தியாவின் முதல் தங்கப் பதக்கம் பளு தூக்குதல் மூலம் கிடைத்தது. கடைசி தங்கம் பேட்மிண்டன் போட்டியில் வந்தது.
சஞ்சிதா சானு.. காஷ்யப்
மகளிர் பளு தூக்குதலில் சஞ்சிதா சானு இந்தியாவின் முதல் தங்கத்தைப் பறித்தார். கடைசி தங்கம் பேட்மிண்டனில் காஷ்யப் மூலம் கிடைத்தது.
முதல் நாளில் 2 தங்கம்
ஜூலை 24ம் தேதி காமன்வெல்த் போட்டியின் முதல் நாளில், இந்தியாவின் சஞ்சிதா சானு, மகளிர் 48 கிலோ பளு தூக்குதல் போட்டியில் தங்கப் பதக்கம் வென்றார். அதேபோல ஆடவர் பளு தூக்குதலில் 56 கிலோ பிரிவில் சுகேன் தே தங்கம் வென்றார்.
2வது நாளில் ஒரு தங்கம்
2வது நாளில் இந்தியாவின் அபினவ் பிந்த்ரா, ஆடவர் 10 மீட்டர் ஏர் ரைபிள் துப்பாக்கிச் சுடுதலில் தங்கப் பதக்கம் வென்றார்.
3வது நாளில் 2 தங்கம்
3வது நாளில் இந்தியாவுக்கு 2 தங்கப் பதக்கம் கிடைத்தது. அபூர்வி சன்டேலா மகளிர் துப்பாக்கிச் சுடுதலில் 10 மீ்ட்டர் ஏர் ரைபிள் பிரிவில் தங்கம் வென்றார். அதேபோல 25 மீட்டர் மகளிர் பிஸ்டல் பிரிவில் ரஹி சரோன்பாட் தங்கப் பதக்கம் வென்றார்.
4வது நாளில் சதீஷ் சிவலிங்கத்திற்குத் தங்கம்
4வது நாளில் இந்தியாவின் சதீஷ் சிவலிங்கம் ஆடவர் 70 கிலோ பளு தூக்குதலில் தங்கம் வென்றார்.
5வது நாளில் ஜித்து ராய்க்குத் தங்கம்
5வது நாளில் ஆடவர் 50 மீட்டர் பிஸ்டல் துப்பாக்கிச் சுடும் போட்டியில் ஜித்து ராய் தங்கம் வென்றார்.
6வது நாளில் 3 தங்கம்
6வது நாளில் 3 தங்கப் பதக்கங்களை இந்தியா வென்றது. ஆடவர் 75 கிலோ மல்யுத்தப் போட்டியில் சுஷில் குமார், 57 கிலோ பிரிவில் அமீத் குமார், மகளிர் மல்யுத்தப் போட்டியின் 48 கிலோ பிரிவில் வினேஷ் போகத்தும் தங்கம் வென்றனர்.
8வது நாளில் மேலும் 3 தங்கம்
அதேபோல 8வது நாளில் மேலும் 3 தங்கங்களை இந்தியா வென்றது. ஆடவர் 65 கிலோ மல்யுத்தம் ப்ரீஸ்டைல் பிரிவில், யோகேந்திர தத் தங்கம் வென்றார். மகளிர் 55 கிலோ மல்யுத்தம் ப்ரீஸ்டைல் பிரிவில் பபிதா குமாரி, ஆடவர் டிஸ்கஸ் துரோவில் விகாஸ் கவுடா ஆகியோர் தங்கம் வென்றனர்.
11வது நாளில் தீபிகா, ஜோஷ்னாவுக்கு தங்கம்
11வது நாளில் இந்தியாவின் தீபிகா பல்லிகல், ஜோஷ்னா சின்னப்பா ஜோடி, மகளிர் ஸ்குவாஷ் இரட்டையர் பிரிவில் தங்கப் பதக்கத்தைத் தட்டி வந்தது.
கடைசி நாளில் காஷ்யப்
12வது நாளில் அதாவது கடைசி நாளில் ஆடவர் பேட்மிண்டன் ஒற்றையர் பிரிவில் இந்தியாவின் காஷ்யப்புக்கு தங்கம் கிடைத்தது.
ஆஸ்திரேலியாவில் அசத்துவார்களா
அடுத்து ஆஸ்திரேலியாவின் கோல்ட் கோஸ்ட் நகரில் காமன்வெல்த் போட்டிகள் நடைபெறும். டெல்லியில் அசத்தியதைப் போல கிளாஸ்கோவில் அசத்தத் தவறிய இந்தியா, கோல்ட் கோஸ்ட்டில் கலக்குமா என்பதை எதிர்பார்த்துக் காத்திருப்போம்.