பத்ம விருதுகள் அறிவிப்பு
இதில் விளையாட்டு வீரர் நீரஜ் சோப்ராவுக்கு பத்ம ஸ்ரீ விருது அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்தாண்டு டோக்கியோவில் நடைபெற்ற ஒலிம்பிக் தொடரின் ஈட்டி எறிதல் போட்டியில் பங்கேற்ற நீரஜ் சோப்ரா தங்கப்பதக்கம் வென்று அசத்தினார். அபினவ் பிந்த்ராவுகுக்கு அடுத்தபடியாக ஒலிம்பிக்கில் தங்கம் வென்ற 2வது வீரர் என்ற பெருமையை அவர் பெற்றார்.
உயரிய விருது
இதனையடுத்து நீரஜுக்கு பரிசு மழை குவிந்து வந்த நிலையில் தற்போது நாட்டின் உயரிய விருதான பத்ம ஸ்ரீ அறிவிக்கப்பட்டுள்ளது. இவருடன் சேர்த்து சுமித் அண்டில், பிரமோத் பாஹட், அவானி லெகஹரா, ஃபைசல் அலி, சங்கரநாராயண மேனன், பிரமானந்த் சன்ங்கல்வார், வந்தனா கட்டாரியா என மொத்தம் 8 பேருக்கு விளையாட்டு துறையின் கீழ் விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளது.
பத்ம பூஷன்
இதே போல பாராலிம்பிக்கில் தங்கம் வென்று அசத்திய தேவ்ந்த்ரா ஜாஜ்ஹரியாவுக்கு பத்ம பூஷன் விருது அறிவிக்கப்பட்டுள்ளது. பாரலிம்பிக்கில் 2 தங்கப்பதங்களை வென்ற முதல் இந்தியர் இவரே ஆகும். இவர்களுக்கு குடியரசு தலைவர் மாளிகையில் நடைபெறும் நிகழ்ச்சியில் இந்த விருதுகள் வழங்கப்படும்.
பரம் விசிஷ்ட் சேவா விருது
முன்னதாக இன்று மாலை நீரஜ் சோப்ராவுக்கு பரம் விசிஷ்ட் சேவா விருது அறிவிக்கப்பட்டிருந்தது. நீரஜ் இந்திய ராணுவத்தில் சுபேதாராக பணியாற்றி வருகிறார். இதனையடுத்து அவருக்கு இந்த விருது அறிவிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.