ஆசிய தடகளப் போட்டிகளில் தமிழகத்தில் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் இலங்கையைச் சேர்ந்த வீரர்கள் சென்னையில் நடைபெறும் போட்டிகளில் பங்கேற்றால் ஆசிய தடகளப் போட்டியை நடத்த முடியாது என்று தமிழக அரசு அறிவித்தது. இதைத் தொடர்ந்து இப்போட்டிகள் புனேக்கு மாற்றப்பட்டன.
இன்று தொடங்கியிருக்கும் இப்போட்டிகளில் 43 நாடுகளைச் சேர்ந்த 580 வீரர்கள் கலந்து கொண்டுள்ளனர். தமிழகத்தைச் சேர்ந்த 14 வீரர்களும் இப்போட்டிகளில் கலந்து கொண்டிருக்கின்றனர். இந்தியாவில் 14 ஆண்டுகளுக்குப் பிறகு ஆசிய தடகளப் போட்டிகள் நடைபெறுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.