4வது டெஸ்ட் போட்டி
லார்ட்ஸ் மைதானத்தில் கடந்த 2010ம் ஆண்டு இங்கிலாந்துக்கும், பாகிஸ்தானுக்கும் இடையிலான 4வது டெஸ்ட் போட்டியின்போது இந்த மூன்று வீரர்களும் ஸ்பாட் பிக்ஸிங்கில் ஈடுபட்டதாக குற்றம் சாட்டப்பட்டு கைது செய்யப்பட்டனர்.
5 ஆண்டுகள் தடை
இவர்களுக்கு 5 ஆண்டுகள் கிரிக்கெட் விளையாடத் தடை விதித்து கடந்த 2011ம் ஆண்டு உத்தரவிடப்பட்டது.
நாட்டு மக்களிடம் மன்னிப்பு
இந்த நிலையில் சம்பந்தப்பட்ட மூன்று வீரர்களும் தங்களது தவறுகளுக்காக நாட்டு மக்களிடம் மன்னிப்பு கேட்பதாக அறிவித்தனர்.
மறுவாழ்வுக்கு தயார்
இந்த நிலையில்தான் தற்போது தான் செய்த தவறை பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்திடம் ஒத்துக் கொண்டுள்ளார் ஆசிப். மேலும் ஐசிசி மற்றும் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் மூலம் மறு வாழ்வுப் புத்தாக்க ஆலோசனைப் பயிற்சிக்குத் தான் தயாராக இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார். விரைவில் இவர் உள்பட 3 பேருக்குமே ஆலோசனை முகாமை கிரிக்கெட் வாரியம் நடத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மீண்டும் விளையாட ஆர்வம்
மேலும், தான் மீண்டும் சர்வதேச கிரிக்கெட்டில் விளையாட ஆர்வமாக இருப்பதாகவும் ஆசிப் தெரிவித்துள்ளார்.