ஸ்காட்லாந்தின் கிளாஸ்கோ நகரில் காமன் வெல்த் போட்டிகள் தொடங்க உள்ளன. இப்போட்டியில் கலந்து கொள்ளும் இந்திய தடகள வீராங்கனை டிண்டு லூகா கண்டிப்பாக தங்கம் வெல்வார் என பி.டி.உஷா தெரிவித்துள்ளார்.
காமன் வெல்த் போட்டிகள்,ஆசிய விளையாட்டுப் போட்டிகள்,உலக கோப்பை போட்டிகள் ஆகியவை இந்த வருடம் நடைபெற உள்ளதால் தடகள விளையாட்டுக்கு மிகப்பெரிய முக்கியத்துவம் கிடைக்கும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
ஐரோப்பிய நாடுகளில் நடைபெறும் சர்வதேச போட்டிகளில் கலந்து கொள்வதன் மூலம் இந்திய வீரர்கள்-வீராங்கனைகளுக்கு சர்வதேச தரத்திலான பயிற்சி கிடைக்கும் எனவும் உஷா தெரிவித்துள்ளார்.