தொடக்கத்தில் சரிவு
இந்நிலையில் டேபிள் டென்னிஸுக்கான 2வது சுற்று போட்டிகள் இன்று நடைபெற்றது. இதில் இந்தியாவின் மணிகா பத்ரா உக்ரைனின் மார்கரி பெசாட்ஸ்காவை எதிர்கொண்டார். இந்த போட்டியின் தொடகத்தில் உக்ரைன் நாட்டு வீராங்கனையின் கையே ஓங்கி இருந்தது. இதனால் முதல் 2 கேம்ஸ்களிலும் 4 -11, 4 -11 என்ற புள்ளிக்கணக்கில் மணிகா பத்ரா பின்தங்கினார்.
கம்பேக்
ஆனால் சுதாரித்துக்கொண்ட மணிகா, 3வது கேம் முதல் தனது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இதனால் 3வது மற்றும் 4வது கேம்களை 11 - 7, 12 - 10 என்ற புள்ளிக்கணக்கில் வென்று சமநிலை அடைந்தார். எனினும் 5வது கேமில் மீண்டும் உக்ரைன் நாட்டு வீராங்கனை 11 - 8 என்ற கணக்கில் கைப்பற்றினார். மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த போட்டியில் யார் வெல்வார் என அதிக எதிர்பார்ப்பு உருவானது.
கடைசி கட்டம்
ஆனால் விடாப்பிடியாக இருந்த மணிகா பத்ரா 6வது மற்றும் 7வது கேமில் 11-5, 11 -7 என்ற கணக்கில் வென்று அசத்தினார். இதன் மூலம் 4 -11, 4 -11, 11 - 7, 12 - 10, 8 -11, 11-5, 11 -7 என்ற கேம் கணக்கில் உக்ரைன் நாட்டு வீராங்கனை மார்கரி பெசாட்ஸ்காவை வீழ்த்தி அடுத்த சுற்றுக்கு முன்னேறியுள்ளார்.
ஆடவர் ஒற்றை பிரிவு
இதே போல இன்று ஆடவருக்கான ஒற்றையர் டேபிள் டென்னிஸ் போட்டியின் 2வது சுற்று நடைபெற்றது. இதில் இந்தியாவின் சத்தியன் ஞானசேகரன் - ஹாங்காங்கின் லாம் சூய் ஹாங்கை எதிர்கொண்டார். ஆனால் இதில் ஹாங் காங் வீரரின் கையே கடைசி வரை ஓங்கி இருந்ததால் 11 - 7, 7-11, 11-4, 5 - 11, 11-9, 12-10,11-6 என்ற கணக்கில் வெற்றி பெற்றார். இதனால் சத்யன் ஞானசேகரனின் டோக்கியோ ஒலிம்பிக் பதக்க கனவு முடிவுக்கு வந்தது.