சச்சின் வழங்கினார்
ஹைதராபாத் பேட்மின்டன் அசோசியேஷன் தலைவர் சாமுண்டேஷ்வரநாத், இவர்களுக்கு விலை உயர்ந்த பிஎம்டபிள்யூ காரை பரிசளித்தார்.
இதை சச்சின் டெண்டுல்கர் தனது கரங்களால் பரிசளித்தார். இந்நிலையில், பிஎம்டபிள்யூ காரை திருப்பி வழங்க தீபா கர்மாக்கர் முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.
குண்டு, குழி சாலை
இதற்கான உரிய காரணத்தை அவர் தெரிவிக்கவில்லை. ஆனால் அவரது பெற்றோரோ, சொந்த ஊரான அகர்த்தலா (திரிபுரா) போன்ற சிறிய நகரில், குண்டும், குழியுமான சாலையில், பிஎம்டபிள்யூ கார் என்பது சரிவராது. மேலும், அதை பராமரிப்பதும் கஷ்டம் என கூறியுள்ளனர்.
பேச்சுவார்த்தை
இதுகுறித்து சாமுண்டேஷ்வரநாத் பிடிஐ செய்தி நிறுவனத்திடம் கூறுகையில், தீபா கர்மாக்கரிடம் இதுகுறித்து பேச உள்ளேன். வீரர், வீராங்கனைகள் ஊக்கம் பெறுவதற்காகவே கார் தரப்பட்டது. அதில் அவருக்கு ஏதாவது பிரச்சினை இருப்பின், மாற்று ஏற்பாடுகளை செய்து தர தயாராக உள்ளேன் என்று கூறியுள்ளார்.
ரொக்கப் பணம்
அனேகமாக, காருக்கு பதிலாக ரொக்கப் பணத்தை பரிசாக வழங்க சாமுண்டேஷ்வரநாத் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதை தீபா கர்மாக்கர் ஏற்பாரா அல்லது மறுப்பாரா என்பது இன்னும் தெரியவில்லை.