பிர்மிங்கம்: காமன்வெல்த் தொடரில் வர்ணனையாளர் திடீரென உயரத்தில் இருந்து கீழே விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
காமன்வெல்த் தொடரின் 8வது நாள் போட்டிகள் இங்கிலாந்தில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
கடந்த 7 நாட்களாக பளுதூக்குதல் போட்டிகளில் இந்திய அணி பதக்கத்தை குவித்த நிலையில், இன்று மல்யுத்த போட்டிகள் தொடங்கியுள்ளன.
இன்று மதியம் தொடங்கிய நடைபெற்ற ஆண்கள் 65 கிலோ எடைப்பிரிவுக்கான போட்டியில் இந்தியாவின் நட்சத்திர வீரர் பஜ்ராங் புனியா பங்கேற்றார். விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த போட்டியில் பஜ்ராங் புனியா வெற்றி பெற்றார். மேலும் மல்யுத்த போட்டியில் அரையிறுதிக்கு முன்னேறினார். இதே போல தீபக் புனியாவும் 86 கிலோ எடைப்பிரிவில் தனது முதல் போட்டியிலேயே வெற்றி கண்டார்.
ஆசிய கோப்பையில் விராட் கோலிக்கு புது பொறுப்பு.. பார்த்தீவ் பட்டேல் சொன்ன தகவல்
இந்நிலையில் இந்த போட்டிகளின் போது வர்ணனையாளர் ஒருவர் திடீரென மாடியில் இருந்து கீழே விழுந்தார். இதனையடுத்து களத்தில் பரபரப்பு ஏற்பட்டது. பார்வையாளர்கள் அனைவரும் உடனடியாக அரங்கத்தை விட்டு, வெளியேற்றப்பட்டனர். மேலும் போட்டிகள் அனைத்தும் முற்றிலுமாக நிறுத்தப்பட்டது.
பாதுகாப்பு குறைபாடுகளை எதேனும் உள்ளதா என அரங்கம் முழுவதும் ஆராய்ந்து பார்த்த அதிகாரிகள், சுமார் 1 மணி நேரத்திற்கு பின் மீண்டும் தொடங்கும் என அறிவித்தனர். கீழே விழுந்த வர்ணனையாளர் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளார்.