இந்தியாவுக்கு தங்கம்
22 வயதான முன்னாள் ஜூனியர் உலக கோப்பை சாம்பியனான அஸ்வினி 236.7 புள்ளிகள் பெற்று தங்கப் பதக்கத்தை கைப்பற்றினார். உக்ரைன் நாட்டைச் சேர்ந்தவரும் உலகின் நம்பர் ஒன் வீராங்கனையான கோஸ்டெவ்ச் 234.8 புள்ளிகள் பெற்று வெள்ளிப் பதக்கம் வென்றார்.
வெண்கல பதக்கம்
செர்பியாவின் ஜாஸ்மினா மிலாவோனோவிக் 215.7 புள்ளிகள் பெற்று வெண்கலப் பதக்கத்தையும் வென்றார். உலகின் நம்பர் ஒன் வீராங்கனையான கோஸ்டெப் யெச்சை 1.9 புள்ளிகள் வித்தியாசத்தில் தோற்கடித்து தங்கப் பதக்கத்தை அஸ்வினி கைப்பற்றியுள்ளார்.
9 பேர் தகுதி
2020ம் ஆண்டு ஒலிம்பிக் போட்டிக்கு இதுவரை துப்பாக்கி சூடுதலில் 9 இந்திய வீராங்கனைகள் தகுதி பெற்றுள்ளனர். அஸ்வினி, சஞ்சீவ் ராஜ்புத், அஞ்சும் மோட்கில், அபூர்வி சண்டிலா, சவுரவ் சவுத்ரி, அபிஷேக் வர்மா, திவ்யான்ஷ் சிங் பன்வார், ரஹி சம்போத், மனு பாகேர் ஆகியோர் தகுதி பெற்றுள்ளனர்.
3வது தங்கப்பதக்கம்
ரியோ டி ஜெனிராவில் நடைபெறும் உலக கோப்பை போட்டியில் இந்தியா பெறும் 3வது தங்கம் இதுவாகும். முன்னதாக அபிஷேக் வர்மா, இளவேனில் வாலறிவன் தங்கம் வென்ற நிலையில் இப்போது அஸ்வின் வென்றுள்ளார்.