குவாங்ஷு: ஆசிய விளையாட்டுப் போட்டியில், ஆடவர் டென்னிஸ் ஒற்றையர் இறுதிப் போட்டியில் உஸ்பெக்கிஸ்தான் வீரரை வீழ்த்தி தங்கப் பதக்கத்தைத் தட்டிச் சென்றார் இந்தியாவின் சோம்தேவ் தேவ்வர்மன்.இது சோம்தேவுக்குக் கிடைத்த 2வது தங்கமாகும். இந்தியாவுக்கு இதுவரை இதையும் சேர்த்து 7 தங்கப் பதக்கங்கள் கிடைத்துள்ளன.நேற்றுதான் இந்தியாவின் சனம் சிங்குடன் இணைந்து ஆடவர் இரட்டையர் பிரிவில் தங்கத்தைத் தட்டிச் சென்றார் சோம்தேவ். இந்த நிலையில் இன்று ஆடவர் ஒற்றையர் இறுதிப் போட்டியில் அவர் உஸ்பெக்கிஸ்தானின் டெனிஸ் இஸ்டோமினை 6-1, 6-2 என்ற நேர் செட்களில் அதிரடியாக வீழ்த்தி வெற்றி பெற்று தங்கத்தைத் தட்டிச் சென்றார்.ஆசிய விளையாட்டுப் போட்டியில், டென்னிஸ் பிரிவில் தனி நபர் ஒருவர் தங்கப் பதக்கம் வெல்வது இதுவே முதல் முறை என்பதால் சோம்தேவின் வெற்றி சாதனையாக மாறியுள்ளது.இந்தியா இதுவரை 7 தங்கப் பதக்கங்களுடன் 8வது இடத்தில் நீடிக்கிறது.சோம்தேவ் ஒற்றையர் தரவரிசையில் 106வது இடத்தில் இருப்பவர். ஆனால் தோல்வி கண்ட டெனிஸோ 40வது இடத்தில் இருப்பவர் என்பது குறிப்பிடத்தக்கது.