நீதிமன்றத்தில் வழக்கு
அப்போது ஜோகோவிச்சின் விசா ரத்து செய்யப்பட்டது செல்லாது என்று ஆஸ்திரேலிய நீதிமன்றம் அறிவித்தது. இதனால் டென்னிஸ் பயிற்சி மேற்கொள்ள ஜோகோவிச் அனுமதிக்கப்பட்டார். இந்த நிலையில், ஜோகோவிச்சின் விசாவை ஆஸ்திரேலிய அரசு மீண்டும் ரத்து செய்தது.
ஆஸி. அரசு குற்றச்சாட்டு
இதனை சற்றும் எதிர்பார்க்காத ஜோகோவிச், மீண்டும் நீதிமன்ற கதவை தட்டினார். ஆனால் ஆஸ்திரேலிய அரசு சார்பில் ஆஜரான வழக்கறிஞர், ஜோகோவிச் கொரோனா தடுப்பூசிக்கு எதிரான நிலைப்பாட்டில் இருப்பதாக தெரிவித்தார். இதனால் ஜோகோவிச்சை பார்த்து அவரது ரசிகர்களும் கொரோனா தடுப்பூசிக்கு எதிரான நிலைப்பாட்டை எடுக்க வாய்ப்புள்ளதாக குறிப்பிட்டார்.
எதிர்ப்பாளர்களின் ஹீரோ
ஏற்கனவே கொரோனா தடுப்பூசி மக்கள் செலுத்தாமல் இருப்பதால், கொரோனாவுக்கு எதிரான போரில் நாம் தோற்று வருகிறோம். ஆனால் ஜோகோவிச் தடுப்பூசிக்கு எதிரானவர்களின் ஹீரோவாக மாறிவிட்டதாக தெரிவித்தார். இதனை ஆஸ்திரேலிய அரசு ஏற்க முடியாது என்று வழக்கறிஞர் தெரிவித்தார்
3 ஆண்டு தடை?
ஆஸ்திரேலிய அரசின் நிலைப்பாட்டை ஏற்று கொண்ட நீதிபதி, ஜோகோவிச்சின் மனுவை தள்ளுபடி செய்தார். இதனையடுத்து ஜோகோவிச் உடனடியாக ஆஸ்திரேலியாவிலிருந்து வெளியேற்றப்படுகிறார். மேலும், விசா முறைகேடு, கொரோனா தடுப்பூசி குறித்து பொய் தகவல் தெரிவித்த காரணத்தால் அவர் ஆஸ்திரேலியாவுக்குள் நுழைய 3 ஆண்டுகள் தடை விதிக்கப்பட வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது
நடால் பதிலடி
இதனால் 9 முறை ஆஸ்திரேலிய ஓபன் சாம்பியனும், 20 முறை கிராண்ட் ஸ்லாம் பட்டத்தை வென்றுள்ள ஜோகோவிச், ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடரில் பங்கேற்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடரை புறக்கணிக்கபோவதாக ரசிகர்கள் அறிவித்தனர். அதற்கு பதில தந்துள்ள நடால், யார் விளையாடினாலும், விளையாடாமல் போனாலும் ஆஸ்திரேலிய ஓபன் தொடரின் புகழ் குறையாது என்று தெரிவித்துள்ளார்.