பாரிஸ் : 2020 பிரெஞ்சு ஓபன் ஆடவர் ஒற்றையர் பிரிவில் சாம்பியன் பட்டம் வென்றார் ரபேல் நடால்.
உலகின் நம்பர் 1 டென்னிஸ் வீரர் நோவாக் ஜோகோவிக்கை இறுதிப் போட்டியில் வீழ்த்தி தன் 20வது கிராண்ட்ஸ்லாம் பட்டம் வென்றார் ஜோகோவிக்.
இதன் மூலம் ரோஜர் பெடரரின் 20 கிராண்ட்ஸ்லாம் சாதனையை சமன் செய்தார். ஆடவர் பிரிவில் அதிக கிராண்ட்ஸ்லாம் வென்ற வீரர்கள் பட்டியலில் பெடரருடன் முதல் இடத்தை பகிர்ந்து கொண்டுள்ளார் ரபேல் நடால்.
பிரெஞ்சு ஓபன் தொடர் களிமண்ணில் நடக்கும் தொடர். இதில் மற்ற முன்னணி வீரர்களை விட ரபேல் நடால் தான் அதிக கிராண்ட்ஸ்லாம் பட்டம் வென்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில், 2020 பிரெஞ்சு ஓபன் தொடரில் ரோஜர் பெடரர் பங்கேற்காத நிலையில் ரபேல் நடால் - நோவாக் ஜோகோவிக் தான் இறுதிப் போட்டியில் மோதுவார்கள் என்ற எதிர்பார்ப்பு நிலவியது.
பிரெஞ்சு ஓபன் பட்டம் வென்ற 19 வயது இளம் புயல்.. ரெக்கார்டு பிரேக் வெற்றி!
அதே போல, இருவரும் முந்தைய சுற்றுகளில் வெற்றி பெற்று இறுதிப் போட்டியில் மோதினர். பரபரப்பான இறுதிப் போட்டியில் ஜோகோவிக்கிற்கு எந்த வாய்ப்பும் கொடுக்காமல், 6 - 0, 6 - 2, 7 - 5 என்ற நேர் செட்களில் அவரி வீழ்த்தினார் ரபேல் நடால்.
இந்த வெற்றி மூலம் தன் 13 வது பிரெஞ்சு ஓபன் பட்டத்தை வென்றார் ரபேல் நடால். இந்த வெற்றி கடந்த ஓராண்டாக ஆடவர் டென்னிஸில் நிலவி வந்த ஜோகோவிக்கின் ஆதிக்கத்துக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளது.