மெக்னீசியம் அதிகம்:
விதிமுறைகளுக்கு எதிரான அளவுக்கு அதிகமாக மெல்டோனியத்தை எடுத்துக் கொண்டது கண்டறியப்பட்டுள்ளது. கடந்த 10 வருடங்களாக அவர் இதைப் பயன்படுத்தி வந்துள்ளார் என்பதும் சோதனையில் தெரியவந்துள்ளது.
ரஷ்யாவின் முன்னணி வீராங்கனை:
இதனையடுத்து ஷரபோவா டென்னிஸ் போட்டிகளில் இருந்து தற்காலிகமாக மார்ச் 12 ஆம் தேதி வரை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
5 கிராண்ட்ஸ்லாம் வென்றவர்:
ரஷ்ய நாட்டைச் சேர்ந்த உலகின் முன்னணி டென்னிஸ் வீராங்கனையான மரியா ஷரபோவா இதுவரை 5 முறை கிராண்ட் ஸ்லாம் பட்டம் வென்றுள்ளார். இதுவரை இந்த மாதத்தில் மட்டும் ஊக்க மருந்து சோதனையில் சிக்கியுள்ள 7 வது வீரர் இவர் ஆகும்.
முழு பொறுப்பு நானே:
இது குறித்து அவர், "நான் ஒரு பெரிய தவறு செய்துவிட்டேன். என்னுடைய ரசிகர்களையும், விளையாட்டினையும் தலைகுனிய வைத்துவிட்டேன். இதற்கு நான் முழு பொறுப்பேற்றுக் கொள்கிறேன்.
நம்பிக்கை இருக்கின்றது:
நான் இந்த வழியில் இத்துடன் என் வாழ்க்கையை முடித்துக் கொள்ள விரும்பவில்லை. மீண்டும் விளையாட எனக்கு ஒரு வாய்ப்பு கிடைக்கும் என்று நான் நம்பிக்கையோடு இருக்கிறேன்" என்று தெரிவித்துள்ளார்.