16 டாப் வீரர்கள்
அந்த செய்திகளில், 10 ஆண்டுகளாக டாப் 50 இடங்களில் உள்ள 16 வீரர்கள் இந்த மேட்ச் பிக்ஸிங்கில் ஈடுபட்டிருக்கலாம் எனக் குற்றம்சாட்டப்பட்டுள்ளது. அத்துடன் இந்த கருப்பு ஆடுகளில் சிலர் கிராண்ட்ஸ்லாம் சாம்பியன்களுமாம்.
தொடர்ந்து ஆட அனுமதி
இந்த 16 வீரர்கள் தொடர்பாக டென்னிஸ் இண்டகெரட்டி யூனிட் அமைப்பின் கவனத்துக்கு கொண்டு சென்றிருந்த போதும் அந்த வீரர்கள் பலரும் போட்டிகளில் பங்கேற்க அனுமதிக்கப்பட்டனர் என்கிறது பிபிசி.
2007-ல் விசாரணை
இதேபோல் டென்னிஸ் சங்கமான ஏடிபி, 2007ல் உருவாக்கிய விசாரணை அமைப்பின் தகவல்களும் ஆதாரங்களாக உள்ளன என்கிறது பிபிசி.
2008-ல் 28 வீரர்கள் மீது சந்தேகம்
2008 ஆம் ஆண்டு 28 வீர்ர்கள் மேட்ச் பிக்ஸிங்கில் ஈடுபட்டதாக டென்னிஸ் சங்கமே விசாரணை நடத்திய போதும் அது முழுமையாக நடைபெறவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கிரிக்கெட் விளையாட்டில்தான் மேட்ச் பிக்ஸிங் பேயாட்டம் போடுகிறது எனில் டென்னிஸையும் அது பதம் பார்த்திருப்பது ரசிகர்களை பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.