நடாலின் போராட்டம்
இந்தப் போட்டி இந்திய நேரப்படி மாலை 7.15 மணிக்கு தொடங்குகிறது. ரஃபேல் நடாலை பொறுத்தவரை காலிறுதி ஆட்டத்தில் அமெரிக்க வீரர் டைலர் ஃபிரிட்சை எதர்கொண்ட போதே நடால் காயத்தால் அவதிப்பட்டார். அப்போது போட்டியின் போதே சிகிச்சை எடுத்து கொண்ட நடால், கடும் போராட்டம் நடத்தி, 4 மணிநேரம் 16 நிமிடம் நீடித்த இந்தப் போட்டியில் வெற்றி பெற்றார்.
வேதனையாக உள்ளது
இதனையடுத்து, அரையிறுதிப் போட்டிக்கு தயாராகும் வகையில் நடால் பயிற்சி மேற்கொண்டார். அப்போது நடாலுக்கு வலி மேலும் அதிகமானதால் போட்டியிலிருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய நடால், விம்பிள்டன் தொடரில் முக்கிய கட்டத்தில் காயம் காரணமாக விலகுவது வேதனையாக இருப்பதாக தெரிவித்தார்.
மகிழ்ச்சி தான் முக்கியம்
தாம் பல முறை காயத்தை பொருட்படுத்தாமல் விளையாடி இருக்கிறேன். ஆனால் இம்முறை காயத்தின் தன்மை அதிமாகிவிட்டது. என்னால் தொடர்ந்து 2 போட்டியில் விளையாட முடியாது என்று எனக்கு தெரியும். முழு உடல் தகுதி இல்லாமல் களத்துக்கு சென்று போட்டியிட எனக்கு மனம் வரவில்லை. எனக்கு சாம்பியன் பட்டங்களை விட மகிழ்ச்சியாக இருப்பது தான் முக்கியம்.
வினோத நோய்
இந்த 2 போட்டிக்காக, 3 மாதம் டென்னிஸ் போட்டியில் பங்கேற்காமல் இருக்க முடியாது. ரஃபேல் நடாலுக்கு பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் போட்டியின் போது காலில் ஒரு விதமான வலி ஏற்பட்டுள்ளது. நடால் மியூல்லர், வெயிஸ் சிண்ட்ரோம் என்ற நோயால் அவதிப்பட்டு வருகிறார். பாதத்தில் இருக்கும் எலும்பில் வலி ஏற்படுவதற்கு நடால் சிகிச்சை மேற்கொண்டு வருவது குறிப்பிடத்தக்கது.