23 சாம்பியன் பட்டங்கள்
23 முறை கிராண்ட்ஸ்லாம் பட்டம் வென்ற மிகப் பெரிய சாதனையாளர் செரீனா வில்லியம்ஸ். இவருக்கு திருமணமாகி 2 வயதில் ஒலிம்பியா என்ற மகள் உள்ளார். தனது மகளையே தனது சொர்க்கமாக நினைப்பவர் செரீனா வில்லியம்ஸ். என்னதான் புகழ் வந்தாலும், பெயர் கிடைத்தாலும் தாய் என்ற உணர்வுதான் மிகப் பெரியது. தாய்மை என்ற பாக்கியம் கிடைப்பதுதான் மிகப் பெரிய சாதனை என்று சொல்கிறார் செரீனா வில்லியம்ஸ்.
அம்மாதான் எல்லாமே
தனது தாயார் குறித்துக் கூறுகையில், அவர் ஒரு லெஜண்டு. அவர் இல்லாமல் நான் இல்லை. எனது குடும்பம் இல்லை. நாங்க யாருமே இல்லை. நிறைய லெஜண்டுகள் இருக்கலாம். இல்லை என்று சொல்லவில்லை. ஆனால் எனக்கு எனது அம்மாதான் எல்லாமே.. ஆரம்பத்திலிருந்தே அவர்தான் என்னை மெருகேற்றி உயர வைத்தார். அதை மறக்கவே முடியாது என்றும் செரீனா கூறியுள்ளார்.
நீங்களும் சொல்லுங்க
நீங்கள் யாரை வேண்டுமானாலும் கொண்டாடலாம். ஆனால் என் அம்மாவுக்கு நிகராக நான் யாரையும் கருத முடியாது. அவர்தான் என்னைப் பொருத்தவரை கொண்டாடப்பட வேண்டியவர். அதில் நான் பெருமை கொள்கிறேன். நீங்களும் கூட யாராவது லெஜண்டை கொண்டாடிக் கொண்டிருப்பீர்கள். அதை என்னுடன் ஷேர் செய்யுங்கள் என்று கூறியுள்ளார் செரீனா. பலரும் அதற்கு நல்ல வரேற்பு அளித்துள்ளனர்.
அருமையான தாய்தான்
உண்மையில் செரீனாவின் தாயாரை வெகுவாக பாராட்ட வேண்டும். தனது இரு மகள்களையும் டென்னிஸ் உலகில் முத்திரை பதிக்க வைத்தவர் அவர்தான். குறிப்பாக செரீனா வில்லியம்ஸ். டென்னிஸ் உலகில் பல சாதனைகளைப் படைத்த இரும்பு வீராங்கனைதான் செரீனா வில்லியம்ஸ். குறிப்பிட்ட சிலரே ஆதிக்கம் செலுத்தி வந்த இந்த ஆட்டத்தில் தனது முத்திரையை அழுத்தமாக பதித்தவர் செரீனா வில்லியம்ஸ். அந்த வகையில் அவரை உருவாக்கிய அவரது தாயாரை நிறைய பாராட்டலாம்.