1-வது குரூப் போட்டிகளில் இந்தியா-தென்கொரியா அணிகள் டெல்லியில் விளையாடி வருகின்றன. நேற்று நடைபெற்ற இரட்டையர் டென்னிஸ் போட்டியின் முதல் சுற்று ஆட்டத்தில், இந்தியாவின் லியாண்டர் பெயஸ், புதுமுக வீரரான புராவ் ராஜாவுடன் இணைந்து தென்கொரியாவின் யாங்-கியூ-லிம் மற்றும் ஜி சங் நாம் இணையை எதிர்கொண்டார்.
இந்த போட்டியில் இந்தியாவின் பெயஸ் ஜோடி 6-4, 7-5, 6-2 என்ற செட்டுகளில் தென்கொரியாவை வீழ்த்தியது.
முன்னதாக முதல் சுற்று ஒற்றையர் ஆட்டத்தில் இந்தியாவின் ரஞ்சித், விஜயந்த் மாலிக் ஆகியோர் தோல்வி அடைந்திருந்தனர்.