மொட்டை மாடியில் டென்னிஸ்
இப்படிப்பட்ட நிலையில்தான் இந்த வீடியோ காட்சியை ஏடிபி டூர் வெளியிட்டுள்ளது. இந்த வீடியோவில் இருவர் டென்னிஸ் விளையாடுகின்றனர். அதாவது இரு வீடுகளின் மொட்டை மாடியில் இருந்தபடி இந்த டென்னிஸ் ஆட்டம் நடைபெறுகிறது. இந்தப் பக்கம் ஒரு பெண், அந்தப் பக்கம் ஒரு பெண். இருவரும் ஜ ஜாலியாக டென்னிஸ் ஆடுகின்றனர். இதுதான் அனைவரையும் கவர்ந்துள்ளது.
லிகுரியா பிரதேசம்
இந்த விளையாட்டு நடைபெறும் இடம் இத்தாலியின் லிகுரியா என்ற பிரதேசமாகும். இங்கும் கிட்டத்தட்ட 6000க்கும் மேற்பட்டோர் கொரோனாவைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்தப் பகுதியானது தற்போது மெல்ல மெல்ல மீண்டு வருகிறது. இந்த நிலையில்தான் மொட்டை மாடிகளிலிருந்தபடி இந்த இரு சின்னப் பெண்களும் டென்னிஸ் ஆடியுள்ளனர். அதுதான் தற்போது வைரலாகி வருகிறது.
விளையாட்டு ஸ்தம்பிப்பு
இத்தாலி கால்பந்துக்குப் பெயர் போனது. ஏகப்பட்ட கிளப்கள் இங்கு உள்ளன. எல்லாமே தற்போது வெறிச்சோடிப் போயுள்ளன. இத்தாலியின் பொருளாதாரமே பெரும் பாதிப்பை சந்தித்துள்ளது. மக்கள் பெரும் விரக்தியுடன் காணப்படுகின்றனர். இந்த நிலையில் இந்த வீடியோ சின்னதாக ஒரு நம்பிக்கையைத் தரும் வகையில் உள்ளது. விரைவில் மீண்டு வருவோம் என்ற செய்தியை இந்த வீடியோ இத்தாலி மக்களுக்கு உணர்த்துவதாக உள்ளது.
விரைவில் மீண்டு வருவோம்
இத்தாலியில் 20 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் இதுவரை கொரோனாவைரஸிடம் சிக்கி உயிரிழந்துள்ளனர். லட்சக்கணக்கானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். அதிலிருந்து இத்தாலி மீண்டு வர எத்தனை காலமாகும் என்று தெரியவில்லை. ஆனால் மக்கள் தங்கள் கவனத்தை விளையாட்டு உள்ளிட்டவற்றில் திருப்பி தங்களைத் தாங்களே புதுப்பித்துக் கொள்ள முயற்சி செய்ய ஆரம்பித்துள்ளனர்.