சிங்கப்பூர்: டபிள்யூ.டி.ஏ. இறுதிச்சுற்று டென்னிஸ் சாம்பியன்ஷிப் தொடரின் இரட்டையர் பிரிவில் சானியா மிர்சா - மார்ட்டினா ஹிங்கிஸ் ஜோடி அரையிறுதிக்கு முன்னேறியுள்ளது.
தரவரிசையில் முன்னணியில் இருக்கும் மகளிர் டென்னிஸ் வீராங்கனைகளுக்கான பைனல் அதாவது டபிள்யூ.டி.ஏ. பைனல்ஸ் என்று அழைக்கப்படும் டென்னிஸ் தொடர் சிங்கப்பூரில் நடைபெற்று வருகிறது.
இதில் பெண்களுக்கான இரட்டையர் பிரிவு ஆட்டத்தில் இன்று இந்தியாவின் சானியா மிர்சா - சுவி்ட்சர்லாந்தின் மார்ட்டினா ஹிங்கிஸ் ஜோடி, தைவானின் யங்-ஜான் சான் - ஹயோ-சிங் சாங் ஜோடியை சந்தித்தது.
கடும் மோதலுக்கிடையே சானியா - ஹிங்கிஸ் ஜோடி 7-6, 7-5 என நேர்செட் கணக்கில் வெற்றி பெற்றது. இதன்முலம் சானியா ஜோடி அரையிறுதிக்கு முன்னேறியது. சானியா - ஹிங்கிஸ் ஜோடி கடந்த ஆகஸ்ட் மாதம் பிரிந்தது. அதன்பின் தற்போது மீண்டும் இணைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.