Tap to Read ➤

தீபக் சஹாருக்கு 4 மாதங்கள் ஓய்வு.. உலகக்கோப்பையும் போச்சு.. என்ன ஆனது?

சிஎஸ்கே அணியின் நட்சத்திர வீரர் தீபக் சஹாருக்கு அடுத்தடுத்து பிரச்சினைகள் உருவாகியுள்ளன.
Saravanamanoj M
சிஎஸ்கே அணி ரூ.14 கோடிக்கு தீபக் சஹாரை மெகா ஏலத்தில் வாங்கியது.
பிப்ரவரி மாதம் வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான டி20 தொடரில் காலில் தசைநார் கிழிவு ஏற்பட்டது.
பெங்களுரூவில் உள்ள தேசிய கிரிக்கெட் அகாடமியில் கடந்த ஒரு 2 மாதங்களாக பயிற்சி பெற்று வருகிறார்.
ஐபிஎல்- ல் சிஎஸ்கே அணிக்காக வரும் ஏப்ரல் 26ம் தேதிக்குள் தீபக் சஹார் கலந்துக்கொள்வார் என தெரிவிக்கப்பட்டது.
NCA வில் 2வது பிரச்சினையாக தீபக் சஹாருக்கு முதுகுப்பகுதியில் வலி ஏற்பட்டுள்ளது. ஏற்கனவே இருந்த பிரச்சினை தற்போது மீண்டும் வந்துள்ளது.
ஐபிஎல் தொடரில் இருந்து விலகிய தீபக் சஹார், குறைந்தது 4 மாதங்கள் ஓய்வெடுத்தால் தான் பழைய ஃபார்முக்கு வருவார் எனக்கூறப்பட்டது.
ஐபிஎல் தொடரை தொடர்ந்து அடுத்ததாக டி20 உலகக்கோப்பையிலும் பங்கேற்கமாட்டார் எனத்தெரிகிறது.
இதுவரை 20 சர்வதேச டி20 போட்டியில் விளையாடியுள்ள தீபக் சஹார் 26 விக்கெட்களை எடுத்துள்ளார். அவரின் எகானமி 8.27 ஆகும்.