For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

சாய்னா நேவால், கிடாம்பி ஸ்ரீகாந்த் வெற்றி.. ஆல் இங்கிலாந்து ஓபன் இரண்டாம் சுற்றுக்கு முன்னேறினர்!

லண்டன் : ஆல் இங்கிலாந்து ஓபன் பாட்மிண்டன் தொடரில் இந்திய முன்னணி பாட்மிண்டன் நட்சத்திரங்கள் சாய்னா நேவால் மற்றும் கிடாம்பி ஸ்ரீகாந்த் முதல் சுற்றில் வெற்றி பெற்றுள்ளனர்.

இதற்கு முன்பு சாய்னா நேவால் இந்த தொடரின் இறுதிச் சுற்று வரை சென்று தோல்வி அடைந்தார். இந்த நிலையில், இந்த முறை பட்டத்தை வெல்லும் நோக்கில் ஆடி வருகிறார்.

All England Open Badminton Championship : Saina Nehwal, Kidambi Srikanth won first round

சாய்னா மகளிர் ஒற்றையர் பிரிவின் முதல் சுற்றில் ஸ்காட்லாந்தின் கிறிஸ்டி கில்மோர்-ஐ சந்தித்தார். இந்த ஆட்டத்தில் 21-17, 21-18 என்ற புள்ளிக்கணக்கில் வெற்றி பெற்றார் சாய்னா. அடுத்த சுற்றில் சாய்னா டென்மார்க்கின் லைன் ஹோஜ்மார்க்-ஐ சந்திக்க உள்ளார்.

கிடாம்பி ஸ்ரீகாந்த் ஆடவர் ஒற்றையர் பிரிவின் முதல் சுற்றில் ஃபிரான்ஸின் பிரைஸ் லேவேர்டெஸ்-ஐ 21-13, 21-11 என எளிதாக வீழ்த்தினார். இவர் அடுத்த சுற்றில் ஆசிய விளையாட்டுப் போட்டியில் தங்கம் வென்ற ஜோனாதன் கிறிஸ்டியை சந்திக்க உள்ளார்.

வாழ்த்துக்கள்! இந்தியாவின் 61வது கிராண்ட்மாஸ்டரானார் ஈரோட்டை சேர்ந்த இனியன்!! வாழ்த்துக்கள்! இந்தியாவின் 61வது கிராண்ட்மாஸ்டரானார் ஈரோட்டை சேர்ந்த இனியன்!!

மற்றொரு வீரர் சாய் ப்ரநீத் ஆடவர் ஒற்றையர் பிரிவில் முதல் சுற்றில் வெற்றி பெற்றார். சமீர் வர்மா தோல்வி அடைந்தார். இரட்டையர் பிரிவில் இந்தியா சார்பில் போட்டியிட்ட அனைவரும் முதல் சுற்றோடு வெளியேறினர்.

Story first published: Thursday, March 7, 2019, 17:34 [IST]
Other articles published on Mar 7, 2019
English summary
All England Open Badminton Championship : Saina Nehwal, Kidambi Srikanth won first round
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X