பாட்மிண்டன் நட்சத்திரங்கள் சாய்னா நேவால் - காஷ்யப் இணையும் திருமணம்.. அழைப்பிதழ் ரெடி!!
ஹைதராபாத் : இந்திய பாட்மிண்டன் நட்சத்திரங்கள் சாய்னா நேவால் மற்றும் பாருபள்ளி காஷ்யப் திருமண அழைப்பிதழ் இணையத்தில் வெளியாகி உள்ளது.
சில வாரங்கள் முன்பு இந்திய பாட்மிண்டன் வீராங்கனை சாய்னா நேவால் சக வீரர் பாருபள்ளி காஷ்யப்பை திருமணம் செய்ய உள்ளார் என கூறப்பட்டது.

இருவரும் அந்த செய்தியை உறுதிப்படுத்தாத நிலையில், நண்பர்கள், உறவினர்கள் மூலம் அந்த செய்தி உறுதியானது.
டிசம்பர் 16 அன்று திருமணம் நடைபெறும் என அப்போது அறிவிக்கப்பட்டது. அதன்படி, டிசம்பர் 16 அன்று ஹைதராபாத்தில் திருமணம் நடைபெற உள்ளது. அதற்கான அழைப்பிதழ் ட்விட்டரில் வெளியாகி உள்ளது.
இருவரும் பாட்மிண்டன் தொடர்களில் தொடர்ந்து பங்கேற்று வரும் நிலையில் இடையே கிடைத்த நாளான டிசம்பர் 16 அன்று திருமணத்தை வைத்துள்ளனர்.
Story first published: Tuesday, November 27, 2018, 16:32 [IST]
Other articles published on Nov 27, 2018


Click it and Unblock the Notifications