துபாயில் சென்னை பேட்மிண்டன் லீக்: கோப்பையை வென்ற சென்னை ஸ்மாஷர்ஸ்
துபாய்: துபாயில் 20.09.2013 அன்று நடைபெற்ற சென்னை பேட்மிண்டன் லீக் போட்டியில் சென்னை ஸ்மாஷர்ஸ் அணி நெல்லை எக்ஸ்பிரஸை வீழ்த்தி கோப்பையை வென்றது.
துபாயில் சென்னை பேட்மிண்டன் லீக் போட்டிகள் நடந்தன. இதில் நெல்லை எக்ஸ்பிரஸ், சென்னை லயன்ஸ், சென்னை ஸ்மாஷர்ஸ் மற்றும் சென்னை அக்கியூஸ்டு உள்ளிட்ட நான்கு அணிகள் பங்கேற்றன.
எந்தெந்த அணிகள் எந்தெந்த இடத்தை பிடித்தன என்பதை பார்ப்போம்.

சென்னை ஸ்மாஷர்ஸ்
சென்னை ஸ்மாஷர்ஸ் அணி சிறப்பாக ஆடி கோப்பையை கைப்பற்றியது. கோப்பையினை கங்காவின் பெற்றோர் வழங்கினர்.

நெல்லை எக்ஸ்பிரஸ்
நெல்லை எக்ஸ்பிரஸ் அணியினருக்கு ரன்னருக்கான கோப்பை வழங்கப்பட்டது.

சென்னை லயன்ஸ்
மூன்றாவது இடத்தை சென்னை லயன்ஸ் அணியும், நான்காம் இடத்தை சென்னை அக்கியூஸ்டு அணியும் பெற்றன. அவர்களுக்கு கோப்பையினை பத்திரிகையாளர்கள் வி.களத்தூர் கமால் பாஷா, முதுவை ஹிதாயத், அம்ஜத் கான் உள்ளிட்டோர் வழங்கினர்.

நினைவுப் பரிசு
பேட்மிண்டன் போட்டி நிகழ்ச்சிகளை சிறப்புற தொகுத்து ஊடகங்களுக்கு வழங்கி வரும் பத்திரிகையாளர் முதுவை ஹிதாயத்திற்கு நினைவுப் பரிசு வழங்கப்பட்டது. நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை சையத் அலி, நஜீர் ஹுசைன் உள்ளிட்ட குழுவினர் சிறப்புற செய்திருந்தனர்.


Click it and Unblock the Notifications