துபாய்: உலக சூப்பர் சீரிஸ் இறுதி பேட்மிண்டன் தொடரில் இந்தியாவின் பி.வி.சிந்து அரையிறுதி போட்டியில் ஜப்பான் வீராங்கனையிடம் தோல்வியடைந்தார்.
உலக பேட்மிண்டன் தொடர் துபாயில் நடைபெற்று வருகிறது. நேற்று நடைபெற்ற அரையிறுதிப் போட்டியில் இந்தியாவின் பி.வி. சிந்து, உலகத்தர வரிசையில் 5-வது இடத்தில் இருக்கும் ஜப்பானின் சங் ஜூ ஹியூனை எதிர்கொண்டார்.

தொடக்கத்தில் இருந்தே தடுமாறிய சிந்து முதல் செட்டை 15-21 என இழந்தார். ஆனால் 2-வது செட்டை போராடி வென்றார். அந்த செட்டை 21-18 எனக் கைப்பற்றினார் சிந்து. வெற்றியை நிர்ணயிக்கும் 3-வது செட்டில் சிந்துவால் ஜப்பான் வீராங்கனையின் ஆட்டத்திற்கு ஈடுகொடுக்க முடியவில்லை. இதனால் அந்த செட்டையும் 15-21 என இழக்க நேரிட்டது. இதனால் முதன்முறையாக இறுதிப் போட்டிக்கு முன்னேறும் வாய்ப்பை பி.வி. சிந்து இழந்தார்