துபாய்: சூப்பர் சீரியஸ் மாஸ்டர்ஸ் பைனல்ஸ் தொடரில், தனது முதல் ஆட்டத்தில் பி.வி. சிந்து வென்றார். அதே நேரத்தில் உலகின் நம்பர் 1 வீரரிடம், கிடாம்பி ஸ்ரீகாந்த் போராடி தோல்வியடைந்தார்.
பாட்மின்டன் போட்டிகளில், ஒவ்வொரு ஆண்டும், சூப்பர் சீரியஸ் பிரிவின் கீழ், 13 ஓபன் போட்டிகள் நடக்கின்றன. அதில் கடைசியாக சூப்பர் சீரியஸ் மாஸ்டர்ஸ் பைனல்ஸ் போட்டி துபாயில் நேற்று துவங்கியது. இந்தப் போட்டியில், உலகின் தலைச் சிறந்த 8 வீரர்கள் மட்டுமே பங்கேற்க முடியும். இந்த ஆண்டுக்கான சூப்பர் சீரியஸ் பைனல்ஸ் போட்டிக்கு, இந்தியாவில் இருந்து ஸ்ரீகாந்த், சிந்து தகுதி பெற்றுள்ளனர்.