கிடைத்த பதக்கங்கள்
ஆடவர் இரட்டையரில் 1982ல் லேராய் டிசா மற்றும் பிரதீப் காந்தே வெண்கலம், அணிகள் பிரிவில் ஆடவர் அணி 1974, 1982, 1986ல் வெண்கலம் வென்றது. மகளிர் அணி 1982ல் வெண்கலம், 2014ல் வெண்கலம் வென்றது. கலப்பு இரட்டையரில் 1982ல் லேராய் டிசா, கன்வல் தாகுர் சிங் வெண்கலம் வென்றது.
ஒரு போட்டியில் 5 பதக்கம்
1982ல் மட்டுமே இந்தியாவுக்கு அதிகபட்சமாக 5 வெண்கலம் கிடைத்தது. மகளிர் ஒற்றையரில் இதுவரை பதக்கம் வென்றதில்லை. தற்போது பிவி சிந்து, சாய்னா நெஹ்வால் பங்கேற்பதால், மகளிர் ஒற்றையரில் இந்தியாவுக்கு பதக்கம் கிடைக்கும் என்ற பெரிய நம்பிக்கை உள்ளது.
வலுவான இந்திய அணி
ஆசிய விளையாட்டுப் போட்டியில் ஒற்றையர் பிரிவில் ஸ்ரீகாந்த், பிரனாய், பிவி சிந்து, சாய்னா நெஹ்வால் பங்கேற்கின்றனர். இவர்களைத் தவிர சாய் பிரனாத், சமீர் வர்மா, சவுரப் வரமா, காயத்ரி கோபிசந்த், அஷ்மிதா சாலிகா உள்ளிட்டோர் அணிகள் பிரிவில் விளையாட உள்ளனர். இரட்டையர் பிரிவுகளில் மிகவும் வலுவான அஸ்வினி பொன்னப்பா, சிக்கி ரெட்டி, சாத்விக் ராங்கிரெட்டி உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர்.
பதக்கங்களை அள்ளி வருமா
அனைத்து வீரர்கள் மற்றும் வீராங்கனைகளை முழு நம்பிக்கையுடன் உள்ளனர். அதனால், பதக்கங்களின் எண்ணிக்கையை உயர்த்துவதுடன், இதுவரை தங்கம் மற்றும் வெள்ளி வென்றதில்லை என்ற குறையை தீர்த்து வைப்பார்கள் என்று எதிர்பார்க்கலாம்.