டெல்லி: பி.வி.சிந்து இந்த ஆண்டு மூன்று முறை இறுதிப் போட்டிகளில் தோல்வி அடைந்தார். கடந்த சில வாரங்கள் முன்பு நடந்த தாய்லாந்து ஓபன் தொடரின் இறுதிப் போட்டியில் தோல்வி அடைந்தார். ஆனால், இறுதிப் போட்டித் தோல்விகள் கண்டு தான் கவலை அடையவில்லை என தெரிவித்துள்ளார்.
சென்ற ஆண்டு, ஆறு முறை இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்ற சிந்து, அதில் மூன்று முறை வென்றார். சிந்துவைப் பொறுத்தவரை, அவரின் ஆட்டம் மிக சிறப்பாக உள்ளது. இந்த ஆண்டில் பல முறை கடினமான வீராங்கனைகளுக்கு எதிராக வெற்றிகளை பெற்று இருக்கிறார். ஆனால், காலிறுதி, அரையிறுதி மற்றும் இறுதி போட்டிகளோடு பல தொடர்களில் இருந்து வெளியேறினார்.
