கிளாஸ்கோ: உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டியிலிருந்து இிந்தியாவின் சாய்னா நேஹ்வால் வெளியேற்றப்பட்டார். அரை இறுதியில் அவர் ஜப்பானின் நஸோமி ஓகுகராவிடம் தோல்வியைத் தழுவினார்.
தோல்வி அடைந்தாலும் சாய்னா மிகக் கடுமையாக போராடினார். இருப்பினும் தன்னை விட நான்கு வயது இளையவரான நஸோமியின் வேகத்தை சமாளிக்க முடியாமல் போய் விட்டது சாய்னால்.

சிறப்பாக விளையாடிய நஸோமி, 12-21, 21-17, 21-10 என் செட் கணக்கில் வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்குத் தகுதி பெற்றார்.
இன்னொரு அறை இறுதியில் இந்தியாவின் பி.வி. சிந்து சீனாவின் சென் யூபியை எதிர்கொள்கிறார். இவராவது இந்தியாவுக்கு தங்கம் வென்று தருவாரா என்ற எதிர்பார்ப்பில் ரசிகர்கள் உள்ளனர்.