ஹாங்காங்: 'ஹாங்காங் ஓபன்' சர்வதேச பேட்மிண்டன் போட்டியின் தொடக்க ஆட்டத்தில் இந்தியாவின் சாய்னா நேவால் வெற்றி பெற்று அடுத்த சுற்றுக்கு முன்னேறினார்.
ஹாங்காங் ஓபன் டென்னிஸ், கோவ்லூன் நகரில் நேற்று தொடங்கியது. முதல் நாளில் தகுதி சுற்று ஆட்டங்கள் நடந்த நிலையில், இந்திய நட்சத்திர வீராங்கனை சாய்னா நேவால் இன்று களம் கண்டார்.

சாய்னா நேவால் தனது முதல் சவாலை தாய்லாந்தின் போர்ன்டிப் பரனாப்ரசெர்ட்சக்கை எதிர்கொண்டார். முதல் சுற்றை 12-21 என்ற கணக்கில் சாய்னா இழந்ததால் இந்திய ரசிகர்கள் அதிர்ச்சியடைந்தனர்.
ஆனால், தீரத்துடன் திருப்பியடித்த சாய்னா நேவால், அடுத்தடுத்த செட்களை 21-19, 21-17 என்ற கணக்கில் வென்று அசத்தினார். இதனால் 'கடைசி 16' சுற்றில் விளையாட சாய்னாவுக்கு வாய்ப்பு கிடைத்துள்ளது. இன்று நடைபெறும் மற்றொரு ஆட்டத்தில் பி.வி.சிந்து முதல் சுற்றில் இந்தோனேஷியாவின் சுசான்டோவை சந்திக்கிறார்.
ஆண்கள் ஒற்றையர் பிரிவில் பிரனாய், அஜய் ஜெயராம், சாய் பிரனீத் ஆகியோரும் இந்த போட்டித்தொடரில் பங்கேற்கிறார்கள்.