உலக பேட்மின்டன் சாம்பியன் போட்டியில் பதக்க வாய்ப்பை இந்தியாவின் பி.வி. சிந்து, சாய்னா நெய்வால் உறுதி செய்துள்ளனர். அரை இறுதிக்கு இருவரும் நுழைந்துள்ளனர். இறுதிப் போட்டியில், இருவரும் மோதுவதற்கு வாய்ப்பு உள்ளது.
2011 முதல் உலகின் மிக உயரிய போட்டிகளில் இந்தியாவுக்கு பதக்கம் கிடைத்து வருகிறது. 2011ல் உலக சாம்பியன் போட்டியில், ஜூவாலா கட்டா - அஸ்வினி போபண்ணா, மகளிர் இரட்டையர் பிரிவில் வெண்கலம் வென்றனர். 2012ல் சாய்னா நெய்வால், ஒலிம்பிக்கில் வெண்கலம் வென்றார். 2013, 2014ல், உலக சாம்பியன் போட்டியில் பி.வி. சிந்து வெண்கலம் வென்றார். 2015ல் உலக சாம்பியன் போட்டியில் சாய்னா நெய்வால் வெள்ளி வென்றார். 2016ல் பி.வி. சிந்து, ஒலிம்பிக்கில் வெள்ளி வென்றார்.
