டெல்லி: இந்திய ஓபன் பாட்மின்டன் போட்டியின் அரை இறுதிக்கு நுழைந்துள்ள ஒரே இந்தியராகிறார் பி.வி.சிந்து. இந்தப் போட்டியில் இருந்து சாய்னா நெஹ்வால் உள்ளிட்ட முன்னணி வீரர்கள், வீராங்கனைகள் கால் இறுதியில் தோல்வியடைந்தனர்.
இந்தியன் ஓபன் பாட்மின்டன் போட்டிகள் டெல்லியில் நடந்து வருகிறது. இதில் மகளிர் ஒற்றையர் பிரிவின் அரை இறுதிக்கு நடப்பு சாம்பியனான பிவி சிந்து முன்னேறினார்.