சிந்துவுக்கு சவால்விடுத்தா
சீன ஓபன் போட்டியைப் போலவே, தனியாக காலிறுதிக்கு முன்னேறிய சிந்து, கடந்தாண்டைப் போலவே பைனலுக்கு முன்னேறினார். நேற்று இரவு நடந்த பைனலில் சீன தைபேயின் டாய் ட்சூ யிங்கை சந்தித்தார். பரபரப்பான இந்த ஆட்டத்தில், உலகின் நம்பர் 1 வீராங்கனையான யிங்குக்கு கடும் சவால் விடுத்தார் சிந்து.
போராடி இழந்தார்
முதல் செட்டில் 3-0 என்று பின்தங்கியிருந்த நிலையில், போராடி சிந்து முன்னேறி வந்தார். முதல் செட்டை 18-21 என்ற கணக்கில் இழந்தார். இரண்டாவது செட்டிலும் சிந்து கடும் போட்டி கொடுத்தார். ஆனால், இறுதியில் யிங்க் 21-18, 21-18 என்ற செட்களில் வென்றார்.
தொடரும் சோகம்
கடந்த ஆண்டு பைனலிலும் யிங்கிடம் சிந்து தோல்வியடைந்தார். சீன தைபே வீராங்கனை யிங்க் இந்த ஆண்டு ஆல் இங்கிலாந்து, மலேசியா ஓபன், சிங்கப்பூர் ஓபன், பிரான்ஸ் ஓபன் மற்றும் தற்போது ஹாங்காங் ஓபன் பட்டங்களை வென்றுள்ளார். ஹாங்காங் ஓபன் போட்டி, 1982ல் துவங்கியபோது, முதல் பட்டத்தை பிரகாஷ் படுகோனே வென்றார். 2010ல் சாய்னா நெஹ்வால் வென்றார்.
மூன்றாவது பட்ட வாய்ப்பு போச்சு
இந்த ஆண்டில் நான்கு முக்கிய போட்டிகளில் பைனலுக்கு சிந்து முன்னேறினார். அதில் இந்திய ஓபன் மற்றும் கொரிய ஓபன் பட்டங்களை வென்றார். உலக சாம்பியன்ஷிப் போட்டியில் ஜப்பானின் நோசோமி ஒகுகாராவிடம் தோல்வியடைந்தார்.